districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

குறைந்த வாடகையில் வணிக வளாகம் தங்கநகைத் தொழிலாளர்கள் கோரிக்கை

கோவை, பிப்.23- கோவையில் கட்டப்படவுள்ள தங்க நகை தொழில் பூங்கா வில், தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையில் வணிக வளாகம் கட்டித்தர வேண்டும், என சிஐடியு தங்கநகைத் தொழிலாளர் யூனியன் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக முதல்வர் பாரம்பரிய பொற்கொல்லர்களின் நலன்  காக்கும் விதமாக, ரூ.126 கோடி மதிப்பில் தங்க நகை தொழில்  பூங்கா அமைக்க சிட்கோ மூலம் 3.41 ஏக்கர் ஒதுக்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்து டெண்டர் அறிவித்தது. இந்நிலை யில், கோவை மாவட்டம், பொள்ளாச்சி சாலையில் உள்ள  சிட்கோ வளாகத்தில் கட்டப்படவுள்ள தங்க நகை தொழில்  பூங்காவில் கட்டுமான துறையுடன் முதற்கட்ட கலந்தாய்வு  கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் சிஐடியு கோவை  தங்க நகைத் தொழிலாளர் யூனியன் பொதுச்செயலாளர் பி. சந்திரன் கலந்து கொண்டு, தங்கநகைத் தொழிலாளர்களுக்கு  குறைந்த வாடகையில் வணிக வளாகம் கட்டித் தருவது, அந்த வணிக வளாகத்தில் பட்டறைகளுக்கு கடை கட்டி கொடுக்க வேண்டும், என கோரிக்கை விடுத்தார். இதில் சங்கத்தின் துணை பொதுச்செயலாளர் சஜீவன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பிரேக் பிடிக்காத அரசு பேருந்து தடுப்புச்சுவர் மீது மோதி விபத்து

கோவை, பிப்.23- பிரேக் பிடிக்காத அரசு பேருந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவர் மீது மோதி விபத்திற்குள்ளானது. தமிழக - கேரளா எல்லை பகுதியான கோவை, வேலந்தா வளம் பகுதிக்கு, உக்கடம் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு  வருகின்றன. இந்நிலையில், ஞாயிறன்று காலை வேலந்தா வளம் பகுதியில் இருந்து உக்கடம் நோக்கி வந்த வழித்தடம் எண்:48 அரசு பேருந்து சுகுணாபுரம், மைல்கல் பகுதியில்  வரும் போது திடீரென பிரேக் பிடிக்காததால். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே அமைக்கப்பட்டு இருந்த தடுப்புச்சுவரில் மோதி நின்றது. பேருந்தில் பயணம் செய்த 40 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குனிய முத்தூர் காவல் துறையினர். அந்தப் பேருந்தில் இருந்து பயணிகளை வேறு பேருந்துக்கு மாற்றி அனுப்பி வைத்தனர். இதன்பின் இதுகுறித்து வெரைட்டி ஹால் போக்குவரத்து பிரிவு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அரசுப்  பேருந்து பிரேக் பிடிக்காமல் சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதிய சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சி  ஏற்படுத்தியது.

வருகை பதிவேட்டில் மோசடி: தலைமையாசிரியர் மீது நடவடிக்கை

சேலம், பிப்.23- ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் வருகை பதிவேட்டில் மோசடி செய்த தாக எழுந்த புகாரில், அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், பூலாம்பட்டி தனி யார் கல்வியியல் கல்லூரியைச் சேர்ந்த  ஆசிரிய மாணவர்கள் கற்றல், கற்பித் தல் பயிற்சிக்காக கடந்த 2023 ஆம்  ஆண்டு செப்டம்பர் மாதம் பல்வேறு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர். இதில் 16 மாணவர்களுக்கு எடப் பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவர்களில் 13 பேர் மட்டுமே தொடா்ச்சியாக பள் ளிக்குச் சென்றுள்ளனர். குறிப்பிட்ட 3  பேர் பயிற்சிக்கு வரவில்லை என கூறப் படுகிறது. மாணவர்களின் தினசரி வரு கைப் பதிவேட்டிலும் 3 பேரும் கையொப் பமிடவில்லை. இதனிடையே, பயிற்சி முடியும் தருவாயில் தொடர்ச்சியாக பயிற்சிக்குச் சென்ற மாணவர்களை அழைத்த அப்பள்ளி தலைமை ஆசிரி யர் பால்ராஜ் மற்றும் உதவி தலைமை  ஆசிரியர் செந்தில்குமாா் ஆகியோர், மாணவர்கள் கையொப்பமிட்ட வரு கைப் பதிவேட்டை பெற்றுக்கொண்டு புதிதாக ஒரு வருகைப் பதிவேட்டை வழங்கினர். குறிப்பிட்ட 3 பேரும் பயிற் சிக்கு வந்தது போன்று தயாரிக்கப் பட்ட வருகைப் பதிவேட்டில் கையொப் பமிடுமாறு மற்ற மாணவர்களைக் கட் டாயப்படுத்தியுள்ளனர். இதனால் அதிர்ச் சியடைந்த சக மாணவர்கள், அனைத்து ஆதாரங்களுடன் முதல்வரின் தனிப் பிரிவு உள்பட பல்வேறு தரப்பினருக் கும் புகார் மனு அனுப்பினர். அதில்  ஒருநாள்கூடப் பயிற்சிக்கு வராதவர்க ளுக்காக வருகைப் பதிவேட்டில் மோசடி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட் டது. இந்த விவகாரம் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர் உத் தரவின் பேரில், புகாருக்கு உள்ளான தலைமை ஆசிரியர் பால்ராஜ், உதவி  தலைமை ஆசிரியர் செந்தில்குமார் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதனடிப்படையில், சம்பந் தப்பட்ட தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. மேலும், இருவருக்கும் 2 ஆண்டுக ளுக்கு ஊதிய உயர்வினை நிறுத்தம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

போலி காசோலை கொடுத்து நகைகளை வாங்கிய கும்பல்: போலீசார் விசாரணை

கோவை, பிப்.23- கோவையில் உள்ள பிரபல தங்க நகைக்கடையில், போலி காசோலை கொடுத்து வைர நகைகளை வாங்கிய கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர். கோவை மாவட்டம், கிராஸ்கட் சாலையில் உள்ள குமரன் தங்க மாளிகையில், கடந்த பிப்.10 ஆம் தேதி மற் றும் 14 ஆம் தேதி என இருமுறை சில நபர்கள் வைர நகை களை வாங்கியுள்ளனர். முதல் முறை வந்தவர்கள் நகை களை தேர்ந்தெடுத்து விட்டு ஃபெடரல் வங்கி காசோலை கொடுத்துள்ளனர். இதன்பின் இரண்டாது முறை ரூ.12.5 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை வாங்கிச் சென்று உள்ள னர். நகைகளை வாங்கிய பிறகு, குமரன் தங்க மாளிகை ஊழியர்கள் காசோலையை வங்கியில் செலுத்திய போது, அந்த காசோலைக்குரிய வங்கி கணக்கு முடக்கப் பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தங்கக்கடை ஊழியர், காட்டூர் காவல் நிலையத்தில் சனி யன்று புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

ஏர் ஹாரன்கள் அகற்றம்

மேட்டுப்பாளையம், பிப்.23- மக்களை அச்சுறுத்தும் வகையில், பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் களை காவல் துறையினர் அகற்றினர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பேருந்து நிலை யத்தில் இருந்து உள்ளூர் மற்றும் வெளியூர் செல்ல 300க்கும்  மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப் பட்டு வருகின்றன. தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந் நிலையில், பேருந்துகளில் அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிக்க விடப்படுவதாகவும், சாலைகளில் செல்லும் போது  முன்னால் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் மக்களை அச் சுறுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களும் பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தது. இதை யடுத்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் ஞாயி றன்று திடீர் ஆய்வு மேற்கொண்ட காவல் ஆய்வாளர் சின்னகா மணன் தலைமையிலான போலீசார், தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த தடை விதிக்கப்பட்ட ஏர்  ஹாரன்களை அகற்றினர்.

மோசடி ஆசாமிகளிடம் சிக்கிய காவலர்

உதகை, பிப்.23- நீலகிரியில் சைபர் கிரைம் ஆசாமிகளிடம் காவலர் ஒருவரே ஏமாந்து ரூ.6 லட்சம் பணத்தை இழந்த சம்ப வம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஈரோடு மாவட்டம், பெருந்துறையை சேர்ந்த 23 வயது வாலிபர் பட்டாலியன் பிரிவில் காவலராக பணி யாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் நீல கிரி மாவட்டத்திற்கு சோதனைச்சாவடி பணி மற்றும் அணை  பாதுகாப்பு பணி விஷயமாக நீலகிரிக்கு வந்தார். வேலை  இல்லாத நேரங்களில் சமூக வலைதளங்களில் பல்வேறு விஷயங்களை பார்வையிட்டு வந்தார்.  அப்போது டெலிகிராம் ஐடி மூலம் ஒரு லிங்க் வந்தது. அதில் கிரிப்டோகரன்சியில் பணம் முதலீடு செய்தால் கூடு தல் பணம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை நம்பிய அவர்  கொஞ்சம் கொஞ்சமாக ரூ.6 லட்சம் வரை முதலீடு செய்தார்.  பின்னர், தேவைக்காக பணத்தை எடுக்க முயற்சி செய்த போது, பணத்தை எடுக்க முடியவில்லை. இது சம்பந்தமாக  யாரையும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இத னால் ஏமாற்றமடைந்த அவர் இது குறித்து உதகை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  சைபர் கிரைம் குற்றங்கள் தினசரி பல இடங்களில் நடந்து  வந்து பொதுமக்கள் ஏமாந்து கொண்டிருந்த சூழ்நிலையில் தற்போது ஒரு காவல் துறையில் ஒருவரே இதுகுறித்து எந்த  விழிப்புணர்வும் இல்லாமல் ஏமாற்றம் அடைந்து இருப் பது காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இரட்டிப்பு பணம் தருவதாகக்கூறி மோசடி: 4 பேர் கைது

சேலம், பிப்.23- இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணமோசடி யில் ஈடுபட்ட 4 பேரை காவல் துறை யினர் கைது செய்தனர். திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜேஷ் (35), கள்ளக் குறிச்சியைச் சேர்ந்த ராஜேஷ் (30),  அவரது மனைவி சத்யபாமா (25)  ஆகியோர் இணைந்து, சேலம்  மாவட்டம், சுவர்ணபுரி அய்யர் தெருவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ‘ரீ கிரியேட் பியூச்சர் இந்தியா’ என்ற பெயரில் தனியார் நிறுவனத்தை தொடங்கினர். இந் நிறுவனத்தில் படித்த, படிக்காத அனைவருக்கும் வேலைவாய்ப்பு தருவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக பகுதி நேரம், முழு நேரம் வேலை செய்தால் ரூ.4 ஆயி ரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை சம்ப ளம் கிடைக்கும் என்று கவர்ச்சிகர மான அறிவிப்பு துண்டு பிரசுரம்  விநியோகம் செய்யப்பட்டது. இதையறிந்த சேலம் பகுதியில் வசிக்கும் ஏராளமானோர் அந்நிறு வனத்தில் விண்ணப்பித்தனர். அப் போது, நிறுவனத்தில் சேருவதற்கு  ஒரு நபருக்கு ரூ.3,500 செலுத்த  வேண்டும். அவ்வாறு செலுத்தும்  நபருக்கு பெரிய சில்வர் பாத்திர மும், வாரம் ரூ.650 வழங்கப்பட்டும். மேலும், நிறுவனத்தில் ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம், ரூ.2 லட் சம் முதலீடு செய்தால் அந்த தொகைக்கு ஏற்ப குறிப்பிட்ட மாதத் தில் பணம் இரட்டிப்பு தருவதாக வும் கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை நம் பிய ஏராளமானோர் லட்சக்கணக் கில் பணத்தை முதலீடு செய்ய ஆரம்பித்தனர். இதுவரை கோடிக் கணக்கில் முதலீடு பெற்றுள்ளனர். இந்நிலையில், ராஜேஷ் - சத்திய பாமா ஆகியோர் நிறுவனத்தை காலி செய்துவிட்டு செல்வதாக  தகவல் பரவியது. இதனால்  அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர் கள் சனியன்று நிறுவனத்தை முற் றுகையிட்டனர். இதுகுறித்து தகவ லறிந்த பள்ளப்பட்டி போலீசார், மாநகர காவல் துணை ஆணையர் கீதா, உதவி ஆணையர்கள் ஆகி யோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, நிறுவனத்தின் உரிமையாளர்கள் ராஜேஷ், சத்தியபாமா உள்ளிட்ட நிர்வாகிகள் பலரை காவல் நிலைத் திற்கு அழைத்து சென்று விசா ரணை நடத்தினர். தொடர்ந்து 50 கோடி ரூபாய் பணம் மற்றும் பல் வேறு ஆவணங்கள், 2 பவுன் நகை  உள்ளிட்டவற்றை போலீசார் பறி முதல் செய்து, அந்நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் உட்பட நான்கு  பேரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தில் சோதனை மேற்கொள்ள முயன்ற போலீசாரை தடுத்து, கொலை மிரட் டல் விடுத்த ஏஜென்ட்கள் 10 பேரை யும் கைது செய்தனர்.

ரயிலில் பெண்கள் பெட்டியில் பயணம்: 207 ஆண்கள் கைது

சேலம், பிப்.23- சேலம் ரயில்வே உட்கோட்டத்திற்குட் பட்ட ரயில் நிலையங்களில் பெண்கள் பெட்டி யில் அத்துமீறி ஏறிய 207 ஆண்கள் கைது செய் யப்பட்டனர். கோவை - திருப்பதி ரயிலில் கடந்த மாதம்  பெண்களுக்கான சிறப்பு பெட்டியில் பய ணித்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 5 மாத  கர்ப்பிணியிடம், இளைஞா் ஒருவர் பாலி யல் அத்துமீறயில் ஈடுபட்டதோடு, கர்ப் பிணியை ரயிலில் இருந்து கீழே தள்ளினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அப் பெண்  மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதையடுத்து, அனைத்து ரயில் நிலையங்களிலும் பெண்கள் பெட்டியில் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் ரயில்வே போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.  குறிப்பாக, பெண்களுக்கான சிறப்புப் பெட்டி யில் அத்துமீறி ஏறும் ஆண்கள் மீது நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேலம் ரயில்வே உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம், தருமபுரி, ஒசூர், ஜோலார்பேட்டை, காட் பாடி ஆகிய 5 ரயில் நிலையங்களிலும் ரயில்வே போலீசார் தொடர் சோதனை நடத்தி  வருகின்றனர். சேலம் ரயில் நிலையத்திலும் பெண் காவலர்கள் பெண்கள் பெட்டியில் பய ணிகளின் பாதுகாப்பை உறுதி செய்து வரு கின்றனர். அப்போது, ஆண்கள் யாரேனும் இருப்பது தெரியவந்தால், அவர்களைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்து வரு கின்றனர். கடந்த ஒரு வாரத்தில் சேலம் வழியாகச் சென்ற ரயில்களில் பெண்கள் பெட்டியில் ஏறிய 40 ஆண்களை போலீசார், பிஎன்எஸ் சட்டம் 35 (1) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதேபோல, சேலம் உட்கோட்டத்தில் தருமபுரியில் 26,  ஒசூரில் 38, ஜோலார்பேட்டையில் 60, காட் பாடியில் 43 பேரும் கைது செய்யப்பட்டுள் ளனர். ஒட்டுமொத்தமாக சேலம் உட்கோட்டத் தில் பெண்கள் பெட்டியில் அத்துமீறி ஏறிய 207  ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்களை கட்டிக் கொண்டு சிலம்பம் சுற்றி சாதனை!

சேலம், பிப்.23- சேலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் தங்க ளது கண்களை கட்டிக்கொண்டு ஒரு மணி நேரம் சிலம்பம்  சுற்றி உலக சாதனை படைத்துள்ளனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த நட ராஜ் என்பவர், பாரம்பரிய கலைகளின் சங்கமும், பயிற்சி பள்ளியும் நடத்தி வருகிறார். இவர் இதுவரை 99 உலக சாதனை களை புரிந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில், தமிழ்நாட்டில் பாரம்பரிய கலைகளை ஊக்கு விக்கும் வகையிலும், தற்போதைய இளைஞர்கள் போதைப்  பாதையில் செல்லாமல் இருக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத் தும் வகையில், மகுடஞ்சாவடியை அடுத்துள்ள காக் காபாளையம் பகுதியிலுள்ள மைதானத்தில் பள்ளி மாணவ,  மாணவிகள் சிலம்பம் சுற்றி சாதனை புரியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. மகுடஞ்சாவடி, இளம் பிள்ளை, இடங்கணசாலை, காக்காபாளையம் உள்ளிட்ட பல் வேறு பகுதிகளைச் சேர்ந்த 3 வயது முதல் 15 வயதுக் குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் 100க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். அப்போது துணிகளால் கண்களை  கட்டிக்கொண்டு ஒரு மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி, வேல்டு சூப்பர் டேலண்ட் புக் ஆஃப் ரெக்கார்ட் என்ற  கின்னஸ் அமைப்பு புத்தகத்தில் இடம் பிடித்தனர்.

பெரு நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மோடி அரசு!

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வேதனை

திருப்பூர், பிப்.23- பிரதமர் மோடி தலைமையி லான ஒன்றிய அரசு, பெரிய  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட் டுமே முக்கியத்துவம் அளிக்கிறது என்பது ஜவுளித்துறையிலும் நடை பெறுகிறது. சிறு, குறு, நடுத்தர ஜவுளி உற்பத்தியாளர்களை இவர் கள் கண்டு கொள்வதில்லை, என திருப்பூர் தொழில் துறையினர் கூறி யுள்ளனர். திருப்பூர் ஏற்றுமதியாளர் மற் றும் உற்பத்தியாளர் சங்க தலைவர்  எம்.பி.முத்துரத்தினம், இந்தியா வில் விவசாயத்துக்கு அடுத்தபடி யாக அதிக வேலை வாய்ப்பு தருவ தாக ஜவுளித்தொழில் உள்ளது. எனி னும் இந்தத் தொழில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து, இதி லுள்ள சிறு, குறு, நடுத்தர தொழில்  துறையினர் பாதிப்பை சந்தித்து வரு கின்றனர். அதிக வேலை வாய்ப்பு வழங்கும் இந்த தொழிலுக்கு, சிறு,  குறு, நடுத்தர தொழில் துறையின ரின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். ஆனால், அரசின் நடவ டிக்கை எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. என்று கூறினார். இது குறித்து திருப்பூரைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், இன்றைய காலம் பெரிய கார்ப் பரேட் நிறுவனங்களுக்கு உகந்த  காலமாக உள்ளது. அவர்களின் குரல் தான் அரசின் குரலாக ஒலிக் கிறது. தில்லியில் அண்மையில் நடைபெற்ற பாரத் டெக்ஸ் என்ற  அகில இந்திய ஜவுளிக் கண்காட்சி யில் பெரிய நிறுவனங்களின் அரங் கங்களை மட்டும் பிரதமர் மோடி  பார்வையிட்டு அதன் உரிமையா ளர்களை சந்தித்துள்ளார். பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் சிறப்பு ‘அவார்டு’ வழங்கப்பட்டுள்ளது. இந்திய ஜவுளித்தொழில் 6  ஆவது இடத்தில் உள்ளது என்று  பிரதமரும் பெருமை கொள்கிறார். ஆனால், உலக அளவில் இந்திய  ஜவுளி வர்த்தகம் பின்தங்கியுள் ளது. அண்டை நாடான பங்களா தேஷ் மற்றும் சீனா, வியட்நாம் ஆகிய நாடுகள் முதன்மை யாக உள்ளன. 140 கோடி மக்கள்  உள்ள மனித வளம் நிறைந்த நாடு இந்தியா. ஜவுளித்தொழிலுக்கு தேவையான அனைத்து மூலப் பொருள்களும் அதிக அளவில் இருந்தும், இந்தியா 6 ஆவது இடத் தில் இருப்பதை நினைத்து பெருமை அடைய முடியாது. ஜவுளி துறையில் இந்தியா கவ னம் செலுத்த வேண்டும். குறிப்பாக  சிறு, குறு, நடுத்தர தொழில் செய் பவர்களை ஊக்கப்படுத்த வேண் டும். ஏனென்றால் இந்தத் தொழிலில்  சிறு, குறு, நடுத்தர தொழில் செய்ப வர்கள் தான் 90 சதவிகிதம் உள்ள னர். ஆனால் அவர்களை ஊக்கப் படுத்துவதை விட்டுவிட்டு மிகப் பெரும் நிறுவனங்களுக்கு மட்டுமே  மோடி அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது. அதைத்தான் பாரத்  டெக்ஸ் கண்காட்சியில் காண  முடிந்தது, என்று தங்களது  வேதனையை வெளிப்படுத்தி யுள்ளனர்.