districts

img

திருமண நிதியுதவியுடன், தாலிக்கு தங்கம் வழங்கல்

நாமக்கல், பிப்.10- நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சி யில், 336 பெண்களுக்கு ரூ.1.43 கோடி  மதிப்பில் திருமண நிதியுதவியுடன், 2,688 கிராம் தாலிக்கு தங்கம் ஆகிய வற்றை அமைச்சர் மா.மதிவேந்தன் வழங்கினார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி சனியன்று நடைபெற்றது இதில், வனத் துறை அமைச்சர் மருத்துவர் மா.மதி வேந்தன், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு  கல்வி தகுதியுடைய 97 பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.24.25 லட் சம் திருமண உதவித்தொகை, தலா 8  கிராம் வீதம் 776 கிராம் தங்கமும், பட்டம்  மற்றும் பட்டயப்படிப்பு கல்வி தகுதியு டைய 239 பெண்களுக்கு தலா ரூ.50 ஆயி ரம் வீதம் ரூ.1.19 கோடி மதிப்பில் திரு மண உதவித்தொகை, தலா 8 கிராம் வீதம் 1,912 கிராம் தங்கம் என மொத்தம் 336 ஏழை பெண்களுக்கு ரூ.1.43 கோடி  மதிப்பில் திருமண நிதியுதவியுடன், தலா 8 கிராம் வீதம் 2,688 கிராம் தாலிக்கு தங்கம் ஆகிவற்றை வழங்கினார். இந் நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ச.உமா, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எம்.மதுரா செந் தில் மற்றும் துறை சார்ந்த அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.