ஈரோடு, ஆக.16- பொது சிவில் சட்டம் அனைவ ருக்கும் எதிரானது, ஏன், எப்படி என்ற தலைப்பில் தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் ஈரோட்டில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இக்கருத்தரங்கிற்கு, மாநில உதவித் தலைவர் ப.மாரிமுத்து தலைமை ஏற்றார். இதில், சிறு பான்மை மக்கள் நலக்குழுவின் மாநில தலைவர் எஸ்.நூர்முகமது கருத்துரையாற்றினார். அவர் பேசு கையில், மணிப்பூரில் வேலியே பயிரை மேய்ந்தது. மணிப்பூரில் அதுதான் நடந்துள்ளது. அப்படி யென்றால் அந்த ஆட்சி ஒரு நிமிடம் நீடிப்பதற்கு அருகதை உண்டா. பிரதமர் வாய் திறக்கவில்லை. கண்டிக்கவில்லை. அதற்குக் கார ணமான முதலமைச்சர் மீது நடவ டிக்கை எடுக்கவில்லை. நேற்று காஷ்மீர், இன்று மணிப்பூர், நாளை இந்தியாவில் எந்த இடத் தில் வேண்டுமானாலும் இதெல் லாம் வரலாம். இதுபோன்ற நிலை, தமிழ் நாட்டில் வராது என்று தயவு செய்து நினைக்காதீர்கள். இது பெரியார் பிறந்த மண், திராவி டத்தின் கோட்டை, தமிழகம் மத நல்லிணக்கம் பேணி வளர்க்கப் பட்ட மண் உண்மைதான். ஆனால், இதே மண்ணில் ஒரு காவல் துறை அதிகாரி சமூக வலைதளத்தில் கிறிஸ்தவர்களே, முஸ்லீம்களே வெளியேறுங்கள் என்று சொல் கிறான். அரசு தலையிட்டது, அடிமை அரசு இருந்திருந்தால் தலையிட்டிருக்குமா என யோசித்து பார்க்க வேண்டும்.
ஆகவே, தமிழகத்தில் இவர்கள் தலையெடுக்கமாட்டார்கள் என் றெல்லாம் நினைக்க வேண்டாம், கால் வலுவாக இருக்கக் கூடியஇடத் தில் நிற்கிறேன் என்று தமிழக முதல்வர் நினைக்கலாம். உண்மைதான் நீங்கள் வலு வாக இருக்கிறீர்கள். கடற் கரையில் அலை வரக்கூடிய இடத் தில் நின்று பாருங்கள். அலை வர வர காலுக்கடியில் மண் கரைந்து கொண்டே இருக்கும். கவனமாக இல்லையென்றால் கவிழ்த்து கொண்டு போய் விடும். காலுக்கடியில் நடக்கும் மண் ணரிப்பை போல நடப்பதைக் கவ னித்து தடுக்கவில்லை என்றால் நாளை ஒரு மணிப்பூர், குஜ ராத், ஹரியானாவைப் போல் தமிழ கத்தில் உருவாக்குவதற்கு இந்த கூட்டம் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்கும். ஆகவே, திமுக அரசும், முதல மைச்சர் மு.க.ஸ்டாலினும் கவன மாக விழிப்போடு இருக்க வேண் டும். பொது சிவில் சட்டம் தேவை யுமில்லை, சாத்தியமுமில்லை என சட்ட கமிசனே சொல்லி விட்டது. அரசியல் சாசனம் நிர்ண யிக்கப்பட்ட போதே பொது சிவில் சட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது. இதனை, முதல் ஜனாதிபதி பாபு ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட அனைவரும் எதிர்த்தனர். இந்த நாடு பன்முக கலாச்சாரம் கொண்ட நாடு. இங்கே ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே சடங்கு, ஒரே உணவு என்று சொல்ல முடியாது. மக்களை வெறுப்பேற்றுவதற்காக அவர்கள் சொல்கிறார்கள். இந்திய நாட்டு மக்களை மதத்தின் பெய ரால் பிளவுபடுத்துவது மட்டுமல்ல, வெறுப்பு அரசியலை பரப்புவது. இசுலாமியர்களையும், கிறித்தவர் களையும் எதிரிகளாகக் கட்டமைப் பது. தங்களுடைய சாதனைக ளாகச் சொல்வதற்கு அவர்களுக்கு எதுவுமில்லை. ஆகவே ஒரே வழி ஒரு எதிரியைக் கட்டமைப்பது. அதுதான் ஆர்எஸ்எஸ்ன் வழி, பாசிச வழி. அதற்காக பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறார்கள். நிம்மதி யாக, மதச்சண்டையற்ற, சச்சர வற்ற, சுமூகமாக, மனிதர்களாக மதிப்போடு வாழ வேண்டுமென் றால் அதற்கு மதச்சார்பின்மை வேண்டும். மக்கள் மதச்சார்பற்ற சக்திகளோடு இணைந்து நிற்க வேண்டும் என்றார். முன்னதாக, மாவட்டத் தலைவர் கே.எஸ்.இஸாரத் அலி வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், ஜமாஅத்துல் உலமா சபை மாநிலத் தலைவர் பி.ஏ.காஜா முஈனுத்தீன் ஆகியோர் உரையாற் றினர். காசிபாளையம் பேரூராட்சி யின் முன்னாள் தலைவர் கே. துரைராஜ் உள்ளிட்ட திரளானோர் இக்கருத்தரங்கில் பங்கேற்றனர். முடிவில், மாவட்ட உதவித் தலை வர் டி.விஜயகுமார் நன்றி கூறி னார்.