districts

img

புதிய திருப்பூரில் குப்பை மலையால் சுகாதார சீர்கேடு

திருப்பூர், நவ.15- தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதிய திருப்பூர் நேதாஜி ஆயத்த ஆடைப் பூங்கா அருகில் சாலையில் குப் பைகள் கொட்டப்படுவதால், துர்நாற் றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் தெரி விக்கின்றனர். திருப்பூர் மாவட்டம், ஈட்டிவீரம்பா ளையம் அருகே புதிய திருப்பூர் நேதாஜி  ஆயத்த ஆடைப் பூங்கா அருகே சாலை யில் மலை போல் குப்பைகள் கொட்டப் பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறு கையில், புதிய திருப்பூர் நேதாஜி ஆயத் தஆடைப் பூங்காவில், சராசரியாக 20 ஆயிரம் சதுரஅடி கொண்ட 54 தொழில் நிறுவனங்கள் உள்ளன.  இதில், வெளிமாநில, வெளி  மாவட்ட என பல ஆயிரம் தொழிலாளர் கள் பணியாற்றி வருகின்றனர். ஏராள மான தொழிலாளர்கள் வேலை செய்யும்  நிலையில் இதன் சுற்றுவட்டாரத்தில் புதிய குடியிருப்புகள் உருவாகி யுள்ளன. மேலும் பல்வேறு வகையான கடைகளும் உள்ளன. இந்நிலையில், தினந்தோறும் பல ஆயிரம் பேர் வந்து செல்லும் இச்சாலையில் மலை போல்  குப்பை கொட்டப்பட்டுள்ளது. கோழிக்க ழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள், காய் கறி கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் இங்கு கொட்டப்படுவதால், மிக மோச மான துர்நாற்றம் வீசுகிறது. இதன் அரு கிலேயே பேருந்து நிறுத்தமும் உள்ளது.  இங்கு வரும் பயணிகள் மூக்கை மூடிக் கொண்டு பேருந்திற்காக காத்திருக்கின் றனர். இந்தியாவிலேயே முன்மாதிரியாக உலகத்தரம் வாய்ந்த இந்த ஆயத்த ஆடைப் பூங்கா பல வசதிகளுடன் உரு வாக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு, வெளி நாட்டு வர்த்தகர்கள் பின்னலாடை நிறுவ னங்களைப் பார்வையிட இங்கு வந்து  செல்கின்றனர். பூங்கா வளாகத்தை அங் குள்ள நிர்வாகம் சுத்தமாக பராமரிக்கி றது. அதே சமயம் இந்த பூங்காவில் வேலை செய்யும் தொழிலாளர்கள் குடி யிருப்பு சார்ந்த பகுதிகளில் போதிய கட் டமைப்பு வசதி இல்லை. திருப்பூர் மாந கரில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தள்ளி சுற்றிலும் கிராமப்புறங்களாக இருந்த இப்பகுதி தற்போது விரிவாக் கத்தினால் ஒரு தனி நகரம் போல் மாறி  வருகிறது. ஆனால் அதற்கேற்ற அடிப்ப டைக் கட்டமைப்பு வசதிகளை உள் ளாட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் ஏற் படுத்த வேண்டும். ஆனால் அதைப் பற்றி கண்டு கொள்ளாததாக அரசு நிர் வாகம் உள்ளது.  எனவே இப்பகுதியில் உள்ள குடி யிருப்புகளில் உள்ள மக்களுக்கு நோய்  தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே  அரசு தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு இப்பகுதியின் சுகாதா ரத்தையும், தூய்மையையும் பாது காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என தெரிவித்தனர்.