districts

நூதன கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் கைது

கோவை, ஜூலை 9- கார்களை திருடி மறைத்து வைத்து, கண்டுபிடித்து தருவதாக கூறி மிரட்டி பணம் பறித்து வந்த நூதன கொள்ளை கும்பலை கோவையில் போலீசார் கைது செய்தனர். கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த நவாஸ், கோவை செல்வ புரம் காவல் நிலையத்தில் கடந்த 20 ஆம் தேதி புகார் ஒன்றை அளித் தார். இதில், தனக்கு சொந்தமான 3 கார்களில் நவாசும் அவரது குடும்பத்தினரும் கோவைக்கு வந்து கோவை குற்றாலம், ஈஷா யோகா மையம் போன்ற பகுதிக ளுக்கு சென்று விட்டு செல்வபுரம் சிவாலாய சந்திப்பு ஐடியல் பேக் கரி அருகில் நிறுத்தப்பட்ட கார் திருட்டு போய் விட்டதாக தெரிவித் திருந்தார். அந்த புகாரின் பேரில், போலீ சார் வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், கேரளா மாநி லத்தை சேர்ந்த ஒரு கும்பல், கோவையை சேர்ந்த ஒரு கும்பல் சேர்ந்து திட்டமிட்டு கார்  திருட்டு  குற்ற செயலில் ஈடுபட்டது தெரிய வந் தது. மேலும்  தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், கரும்புக டையை சேர்ந்த முகமது யாசீர், அசாருதீன், முகமது யூசுப், ஜான் சுந்தர் ஆகிய நான்கு பேரை போலீசார் கடந்த 28 ஆம் தேதி கைது செயது நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும், அவர்கள் கொடுத்த தக வலின் பேரில் அப்பாஸ் என்ப வரும் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டார். இது குறித்த தொடர் விசாரணையில், கேரளாவில் இயங்கி வரும் கும்ப லில் உள்ளவர்கள் அங்கு இருக்கும் சொகுசு கார்களை அதன் உரிமை யாளர்களிடம் இருந்து வாடகைக்கு எடுக்கின்றனர். பின்னர், அவர்க ளுக்கு தெரியாமல் கோவை கரும்பு கடையில் ரியாசுதீன் மற்றும் தௌ பீக் என்பவர்களிடம் அடமானம் வைத்து பணம் பெற்று கொள்கின் றனர். அந்த கார்களில் உள்ள ஜி.பி.எஸ் கருவியை துண்டித்து, வாகனத்தின் நெம்பர் பிளேட்டை யும் கழட்டி எடுத்து விடுகின்றனர். இதற்கு பதிலாக யாரும் கண்டு பிடிக்க முடியாத படி புதிய ஜிபிஎஸ் யை பொருத்தி விடுகின் றனர். பின்னர், இவர்களின் கூட்டா ளியான ஜான்சுந்தரின் ஒர்க் ஷாப் பில் வைத்து புதியதாக பெயிண் டிங் செய்து கலரை மாற்றி காரை விற்கும் தொழில் செய்து வந்தது விசாரணையில் தெரியவந்து உள்ளது. மேலும், விற்ற கார்களில் பொருத்தி உள்ள ஜி.பி.எஸ் கருவியை கொள்ளையர்கள் டிபி டிராக் என்ற செல்போன் செயலி மூலம் கார்களின் நடமாட்டத்தை கண்காணிக்கின்றனர். பின்னர் காரின் உண்மையான உரிமை யாளர்களுக்கு தகவல் தருகின்ற னர்.  காணாமல் போன கார் எங்கு  உள்ளது என்பது எங்களுக்கு தெரி யும் நேரில் வந்தால் உங்களுக்கு  உதவுவதாக கூறுகின்றனர். அவர் களை வரவழைத்து. பின்னர் அவர் களை  மிரட்டி பணம் பெற்று  கொண்டு கார் இருக்கும் இடத்தை  சொல்லிவிட்டு நூதன முறையில்  பணம் சம்பாதித்துள்ளது விசா ரணையில் தெரியவந்துள்ளது.  இதனைத்தொடர்ந்து, இவ்வ ழக்கில் தொடர்புடைய கேரளாவை சேர்ந்த கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.