districts

img

காந்தி நினைவுதின உறுதியேற்பு

கோவை, ஜன. 31- மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி பாப் பநாய்க்கன்பாளையம் காந்தி சிலை அருகே சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மை மக்கள் நலக்குழு கோவை  மாவட்ட  நிர்வாகிகளான முன்னாள் கோவை மாமன்ற உறுப்பி னர் என்.ஆர். முருகேசன், மாவட்டச் செயலாளர் ஏ.சாதிக் பாட்சா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, கோவை மற்றும் பொள்ளாச்சியில் மாதர் சங்கம் சார்பில் நினைவுதின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்டத் தலைவர் ஜோதிமணி, மாவட்டச் செயலா ளர் சுதா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் முன்பு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திமுகவின் மாவட்டச் செயலாளர் நல் லசிவம் தலைமையில், நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கி ரஸ், சிபிஎம், சிபிஐ, மனிதநேய மக்கள்கட்சி, தமுமுக மற்றும்  கொமதேக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன.  இதேபோன்று, ஈரோடு மாநகராட்சி சோலாரில் பாலர்  பூங்கா சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஒருங் கிணைப்பாளர் ஆர்.அச்சுதன் தலைமையில் நடை பெற்ற நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற பேராசிரியர் வி.பெரு மாள், வாலிபர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் பி.ராஜா,  ஆர்.மாரிமுத்து, சி.வீரபாண்டியன்  மற்றும் பாலர் பூங்கா மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.