districts

img

தோழர் என்.சங்கரய்யா நினைவேந்தல்

கோவை, நவ.15- விடுதலை போராட்ட வீர ரும், மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான தோழர் என்.சங்கரய்யாவின் முதலாம் ஆண்டு நினைவு  தினம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளியன்று அனுசரிக்கப்பட்டது. கோவை, காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின்  கோவை மாவட்டக்குழு அலு வலகத்தில் தோழர் சங்க ரய்யா நினைவேந்தல் கூட் டம் நடைபெற்றது. இதில்  கட்சியின் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் யு.கே. வெள்ளிங்கிரி, மூத்த தோழர் ஏ.ஆர்.கல்யாண சுந்தரம், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் கே.மனோகரன், அஐய்குமார், கே.எஸ்.கனக ராஜ், என்.ஆறுச்சாமி மற்றும் தீக்கதிர் பொதுமேலாளர் எஸ்.ஏ.மாணிக்கம், கோவை மாமன்ற உறுப்பினர் வி. இராமமூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர்கள், இடைக் குழு செயலாளர்கள் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர். சேலம் சேலம் சிறை தியாகிகள் நினைவகத்தில் சிபிஎம் மாவட் டக்குழு அலுவலக செயலா ளர் பி.சந்திரன் தலைமையில் நினைவேந்தல் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, எம். குணசேகரன், சேலம் தாலுகாச் செயலாளர் கே.எஸ்.பழனிசாமி, மேற்கு மாநகரச் செயலா ளர் கணேசன், வடக்கு மாநகரச் செயலாளர் என்.பிரவீன்குமார், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் எம்.கனகராஜ், பி.பாலகிருஷ்ணன், எஸ்.பவித்ரன், பெரியசாமி, ஆர்.குழந்தை வேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்ரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.விஜயராகவன் சங்க ரய்யாவின் நினைவுகளை பகிர்ந்தார். இந்நிகழ்வில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.சுந்தரராஜன், பி.லலிதா, நகரச் செயலா ளர் வி.பாண்டியன், தாலுகாச் செயலாளர் என்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சத்தியமங்கலம் தாலு காக்குழு அலுவலகத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் கே.எம்.விஜயகுமார் தலைமை யில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. தருமபுரி தருமபுரி, செங்கொடிபுரத்தில் தோழர் சங் கரய்யாவின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் எம்.மாரிமுத்து, எம்.முத்து, எஸ். கிரைஸாமேரி, மாவட்டக்குழு உறுப்பினர் கள் கே.என்.மல்லையன், கே.பூபதி, ஒன்றி யச் செயலாளர் கே.கோவிந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்வில், சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எம்.வி.மாதன், வி.இரவி,  ஒன்றியச் செயலாளர் ஆ.ஜீவானந்தம், மாவட் டக்குழு உறுப்பினர் கே.அன்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.