சேலம், பிப்.9- ஸ்பான்சர் வங்கிகளின் பிடியிலிருந்து கிராம வங்கிகளை விடுவித்து தேசிய கிராம வங்கிகளை உருவாக்க வேண்டும் என வலியு றுத்தி சேலத்தில் கிராம வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிராம வங்கிகளில் காலியாக உள்ள பணி யிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சீரான இடைவெளியில் மித்ரா கமிட்டி அடிப்ப டையில் பணி நியமனங்களை செய்ய வேண் டும். தற்காலிக கடைநிலை ஊழியர்களை உட னடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இரு தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிராம வங்கிகளிலும் விடுமுறை விதிமுறை கள் உள்ளிட்ட அனைத்து பணி விதிகளையும் அமல்படுத்த வேண்டும். பென்சன் திட்டத்தை வணிக வங்கிகளை போல் முழுமையாக அமல்படுத்தி, விடுபட்டவர்களை உடனடி யாக இணைக்க வேண்டும். ஸ்பான்சர் வங்கி களின் பிடியிலிருந்து கிராம வங்கிகளை விடு வித்து, தேசிய கிராம வங்கிகளை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டியி லுள்ள தமிழ்நாடு கிராம வங்கி தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிராம வங்கி அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ஆன்டோ ஆல்பர்ட் தலைமை வகித்தார். இதில் சங்கத் தின் பொதுச்செயலாளர் அறிவுரை நம்பி, தலைவர் லட்சுமி நாராயணன், ஓய்வூதியர் சங்க பொதுச்செயலாளர் டி.கிருஷ்ணன், அகில இந்திய கிராம வங்கி ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் மாதவராஜ், இந் திய வங்கி ஊழியர் சம்மேளன துணைத்தலை வர் எஸ்.ஏ.ராஜேந்திரன், மாவட்டச் செயலா ளர் எஸ்.தீனதயாளன் உட்பட திரளான கிராம வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.