districts

img

இலவச சட்ட உதவி மையம் தொடக்கம்

திருப்பூர், செப். 20 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருப்பூர் தெற்கு  ஒன்றியக்குழு சார்பில் இலவச சட்ட உதவி மையம் செவ்வாய் கிழமை தொடங்கப்பட்டது. திருப்பூர் பழைய பஸ் நிலையம் எதிரில்  மரக்கடை சந்தில் பி.ஆர்.நிலையத்தில் இந்த மையம் தொடங் கப்பட்டுள்ளது. இம்மையத்தை வாலிபர் சங்கத்தின் தெற்கு  ஒன்றிய செயலாளர் டி.உமாசங்கர் தலைமையில் வழக்கறி ஞர் எஸ்.பொன்ராம் துவக்கி வைத்தார். முதல் வழக்காக நுண் நிதி நிறுவனங்களின் தொந்தரவு பற்றி வாலிபர் சங்க முன்னாள்  மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஆனந்தனிடம் முறையிடப் பட்டது.  இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் குழுவில் அமர்நாத், தம யந்தி, நவீன் லக்ஷ்மன், கௌரி, பிரகாஷ் ஆகியோர் இடம்  பெற்றுள்ளனர். வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ். அருள், மாவட்டக்குழு உறுப்பினர் சிந்தன் மற்றும் தெற்கு  ஒன்றிய குழு உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்ட னர். சிஐடியு நிர்வாகிகள் கே.உன்னிகிருஷ்ணன், எம்.ராஜ கோபால், பி.பாலன் ஆகியோர் கலந்து கொண்டனர். சட்ட  உதவி மைய தொடர்பு எண்: 9865353650.

;