உடுமலை, பிப்.11- விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு தர, பணம் வசூலிக்கும் மின் வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உடுமலை பகுதி விவசாயிகள் வலியு றுத்தி உள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகம் முழு வதும் பல வருடங்களாக மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம் செய்த விவசாயி களுக்கு மின் இணைப்பு வழங்காமல் இழுத் தடித்து வந்தனர். அதேநேரம், தட்கல் என்ற திட்டத்தை அறிவித்து குதிரை திறன் அடிப் படையில் லட்சக்கணக்கில் பணம் கொடுப்ப வர்களுக்கு மட்டுமே மின் இணைப்பானது வழங்கப்பட்டு வந்தது. இதற்கெதிராக விவ சாயிகள், விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் கடந் தாண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற் பட்டு திமுக அரசு புதியதாக பொறுப்பேற் றது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற தினமே ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவசமாக மின் இணைப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் தமிழகம் முழு வதும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சிய டைந்தனர்.
இதையடுத்து மின் இணைப்பு குறித்த கடிதம் கிடைத்த விவசாயிகள் தங்களுக்கு அரசு அறிவித்த இலவச மின் இணைப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மின்வா ரிய அலுவலகத்திற்கு படையெடுத்தனர். ஆனால், தமிழக அரசு எந்த நல்லெண் ணத்துடன் அறிவித்ததோ அதற்கு நேர் மாறாக மின்வாரிய அதிகாரிகள் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, உடுமலை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் புதிய மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த விவசாயிகளிட மிருந்து பல்வேறு காரணங்களை கூறி வசூல் வேட்டையை அரங்கேற்றி வருகின்ற னர்.
அதாவது, மின் வாரிய அலுவலகத் திற்கு வந்தால் முதலில் விண்ணப்பம் என்ற பெயரில் தொடங்கி, இடத்தை பார்க்க வரும் போது ஒரு தொகை, மின் இணைப்பு வழங்க எவ்வளவு மின் கம்பங்கள் நட வேண்டும் என்று அளவீடு செய்ய வருபவர்களுக்கு ஒரு தொகை, அதற்காகும் செலவு எவ்வளவு என்று கணக்கீடு செய்யும் அதிகாரிக்கு ஒரு தொகை, புதிய மின் மாற்றி அமைக்க ஆகும் செலவு, புதிதாக நடப்படும் கம்பங்கள் மற்றும் கம்பிகள் இழுக்க வரும் ஊழியர் களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை என எவ் வித அச்சமின்றி காறராக வசூல் செய்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டு கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இலவச மின் இணைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மின் அலு வலகம் வந்தால் விண்ணப்பம் முதல் மின் கம்பம் நடும் வரை அனைத்து அதிகாரி களும் பணம் தர கட்டாயப்படுத்துகிறார் கள். இல்லை என்றால் தேவையில்லாத பல சான்றிதழ்கள் கேட்டு தினமும் அழையவிடு கிறார்கள். ஆகவே, அரசின் இலவச மின் இணைப்பு விவசாயிகளுக்கு வழங்க இருக் கும் நடைமுறைகளை மின் வாரிய அலு வலகத்தில் அறிவிப்பு பலகையாக வைத் தால்கூட அனைவருக்கும் பயன் உள்ள தாக இருக்கும் என்கிறார்கள்.
ஆகவே, தமிழக அரசின் மக்கள் நல திட்டங்கள் பொதுமக்களுக்கு செல்ல விடாமல் தடுத்து, அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வசூல் வேட்டை யில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது பாரபட்சமின்றி தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கே.மகாதேவன், உடுமலை