கூகலூர் அரசு உதவிப் பெறும் மேல் நிலைபள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி வியழனன்று நடைபெற்றது. இதில், அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் பங்கேற்று மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி களை வழங்கினார்.உடன் பேரூராட்சி மன்றத் தலைவர் ஜெயலட்சுமி, தலைமை ஆசிரியர் சிவக்குமார், வார்டு செயலா ளர்கள் பழனிசாமி, ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.