திருப்பூர், அக்.10– காங்கேயத்தில் தனியார் நிதி நிறு வனம் நடத்தி மைக்ரோ பைனான்ஸ் குழுக் கடன் மற்றும் தனிநபர் கடன் தருவதாகக் கூறி பல நூறு பேரிடம் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. மோசடியாளர் கள் தலைமறைவான நிலையில், பாதிக்கப்பட்ட பொது மக்கள் நிதி நிறு வன அலுவலகத்தை முற்றுகையிட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கேயம் திருப்பூர் சாலையில் என்கேபி பைனான்சியல் சர்வீசஸ் என்ற பெயரில் தனியார் நிதி நிறுவ னம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டுள்ளது. இங்கு மைக்ரோ பைனான்ஸ் குழுக் கடன் மற்றும் தனி நபர் கடன் வழங்கப்படும் என்று விளம் பரப்படுத்தப்பட்டுள்ளது. இதை நம்பி காங்கேயம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இங்கு கடன் பெற விண்ணப்பித்துள்ளனர். கடன் பெறுவதற்கு காப்பீட்டுத் தொகை செலுத்த வேண்டும். ஒரு குழுவில் 10 பேர் இருந்தால் நபர் ஒருவர் ரூ.1340 வீதம் செலுத்த வேண் டும் எனக் கூறியுள்ளனர். அப்போது தான் குழுவில் உள்ள ஒவ்வொருவ ருக்கும் தேவையான கடன் தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள் ளது. இதை நம்பி சுமார் இருநூறு குழுக்கள் இவர்களிடம் கடன் பெறுவ தற்காக காப்பீட்டுத் தொகை செலுத் தியுள்ளனர். இதன் மூலம் தோராய மாக ரூ.26 லட்சத்துக்கு மேல் வசூ லிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தனிநபர் கடன் பெறு வதற்கும் காப்பீட்டுத் தொகை செலுத்த வேண்டும் என்று இந்நிறுவனத்தினர் கேட்டுள்ளனர். கேட்கும் கடன் தொகைக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.70 ஆயிரம் வரை வசூலித்துள்ள னர். காப்பீட்டுத் தொகை கொடுத்த வர்களுக்கு அவர்கள் கேட்ட கடன் தொகைக்கான காசோலைகளை அந் நிறுவனத்தினர் கொடுத்துள்ளனர். இந்த காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது, பணம் இல்லை என்று வங்கிகள் திருப்பி அனுப்பி யுள்ளனர். இதையடுத்து, சம்பந்தப் பட்டவர்கள் செவ்வாயன்று காலை என்கேபி நிதி நிறுவனத்திற்கு வந்த போது, அங்கு பொறுப்பில் இருந்த மேலாளர் உள்ளிட்ட அலுவலர்கள் யாரும் இல்லை. இரண்டு பெண் ஊழி யர்கள் மட்டுமே இருந்தனர். அவர் களிடம் காசோலை பணம் இல்லாமல் திரும்பி வந்ததைப் பற்றி வாடிக்கை யாளர்கள் கேள்வி கேட்டு வாக்கு வாதம் செய்தனர். பாதிக்கப்பட்டவர் கள் ஒவ்வொருவராக அங்கு வந்த நிலையில், ஏற்கெனவே குழுக் கட னுக்காக பணம் செலுத்தியவர்களும் அங்கு திரண்டனர். மேலாளர் உள்ளிட்டவர்களின் செல்போன்கள் அணைத்து வைக்கப் பட்டிருப்பதாகவும், அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்தனர். அந்த அலு வலகத்தில் இருந்த பெண் ஊழியர் களை முற்றுகையிட்டு பாதிக்கப்பட் டோர் சரமாரி கேள்வி எழுப்பினர். அவர்களும் இது பற்றி எதுவும் தெரி யாது என்று பதில் கூறியுள்ளனர். தக வல் அறிந்து காங்கேயம் காவலர்கள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி அலுவலக பெண் ஊழியர்களை பாது காப்பாக மீட்டனர். பாதிக்கப்பட்டவர் கள் காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தனியார் நிதி நிறு வனத்தினர் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்த சம்பவம் காங்கேயத் தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.