districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

என்.சங்கரய்யாவுக்கு நினைவஞ்சலி

என்.சங்கரய்யாவுக்கு நினைவஞ்சலி உடுமலை, நவ.17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்  தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு புகழஞ்சலி நிகழ்ச்சி மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில் வியாழக்கிழமை நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மடத்துக்குளம் தாலுகா குழு உறுப்பினர் ராஜரத்தினம் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில் கட்சியின் தாலுகா குழு உறுப்பினர் கள் எம்.எம்.வீரப்பன், கே..ஈஸ்வரன் முன்னிலை வகித்தனர்.  மேலும்  திராவிட முன்னேற்ற கழகத்தின் தெற்கு மாவட்ட  அவைத்தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜெயராமகிருஷ்ணன்,  திரவிட முன்னேற்ற கழகத்தின் மேற்கு  ஒன்றிய செயலாளர் கே.ஈஸ்வரசாமி, கிழக்கு ஒன்றிய செயலா ளர் ஷாகுல், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில  அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சர் எஸ்.சண்மு கவேல், அதிமுக ஒன்றிய செயலாளர் காளீஸ்வரன், பேரூ ராட்சி செயலாளர் என்.டி.பி.செல்வராஜ், பொதுக்குழு உறுப் பினர் தண்டபாணி, காங்கிரஸ் வட்டார தலைவர் ராஜேஷ் கண்ணா, மதிமுக பேரூராட்சி செயலாளர்  நாகராஜ், விடுதலை  சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சதீஸ்குமார், ஆதித்தமிழர் பேரவை தங்கவேல், திராவிடர் விடுதலை கழ கம் சார்பாக கணக்கன், திராவிடர் கழகம் கிருஷ்ணன், இந்திய  யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் சித்திக், வியாபா ரிகள் சங்கம் கே.சக்தி ,அரிமா சங்கத்தின் சிவராஜ், அரசு ஊழி யர் சங்கத்தின் முருகசாமி, ஓய்வூதியர் சங்கம் ராமதுரை உள் ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத் தினர். அதேபோல திருப்பூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட  ஏவிபி லேஅவுட், சக்தி நகர், ஸ்ரீநகர், கங்காநகர், பெருமா நல்லூர், வாவிபாளையம், காளம்பாளையம் ஆகிய பகுதிக ளில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பல்வேறு கட் சிகளை சேர்ந்த பலர் பங்கேற்றனர். காங்கேயத்தில் பஸ் நிலையம் அருகே நடைபெற்ற தோழர் என்.சங்கரய்யா நினைவேந்தல் நிகழ்ச்சியில் மார்க் சிஸ்ட் கட்சியின் தாலுக்கா செயலாளர் கே.திருவேங்கடசாமி தலைமையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்க: சிபிஎம்

 நாமக்கல், நவ.17- ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிலவும் மருந்துகள் தட்டுப்பாட்டை சரி செய்ய மார்க்சிஸ்ட் கட்சியினர் கோரிக்கை  விடுத்துள்ளனர்.  நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையத்தில் 40 வருடங்க ளாக ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு  பல்வேறு பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் இம்மருத்துவ மனையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இரத்த அழுத்தம், சக்கரை நோய் உள்ளிட்ட நோய்களோடு வருப வர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரை இல்லாத  நிலை உள்ளது. மேலும், நோயாளிகளை மாணிக்கம்பா ளையத்தில் உள்ள மருத்துவமனையில் மருந்துகளை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தி வருகின்றனர். இது, நோயாளி களை அலைக்கழிப்பதாக உள்ளது.  எனவே, அரசின் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேவை யான மருந்து, மாத்திரைகள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொறுப்பு மருத்துவர் பாலாஜியிடம், ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ், சிபிஎம் ஒன்றியச் செயலாளர்  கே.எஸ்.வெங்கடாசலம் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.

பாண்டியாறு - மாயாறு திட்டம்

கோபி, நவ.17- கோபி அருகே கீழ்பவானி பாசனத்தில்  போதிய அளவு தண்ணீர் கிடைக்காததால்  20 சதவீத நெல்சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள தாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ள னர்.  ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை யில் இருந்து சம்பா சாகுபடிக்காக கீழ்பவானி  வாய்க்கால் பாசனத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.  கீழ்பவானி பாசனத்தின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மூன்று மாவட்டங்க ளில் ஒரு லட்சத்து 3500 ஏக்கர் விளைநிலங்கள்  பாசன வசதி பெருகிறது. இதேபோல் கீழ்ப வானி கிளை வாய்க்கால்கள் மூலம் கோபி  சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிக ளில் பல்வேறு ரக நெல் நடவு பணியும் நடை பெற்று வருகிறது. இந்நிலையில், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கீழ்பவானி பாசனத்தில் 20 சதவீத  அளவுக்கு நெல் நடவு பணி பாதிக்கப்பட்டுள் ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக் கின்றனர். இதில் கோபி அருகே பவளமலை பகுதியில் வழக்கமாக 20 ஏக்கருக்கு மேல் நெல் நடவு பணி நடக்கும் ஆனால் நடப் பாண்டு பாதியாக குறைந்து பத்து ஏக்க ரில் நெற்பயிரும் மீதம் 10 ஏக்கரில் சோளப்ப யிரும் பயிரிடப்பட்டுள்ளது. இதேபோல் புதுக்கரைப்புதூரில் நெல் நாற்று விடப் பட்டு நாற்று வளர்ந்த நிலையில் போதிய தண்ணீர் இல்லாததால் கால்நடைகளை விட்டு மேச்சலுக்கு விடப்பட்டுள்ளது.  தண்ணீர் பிரச்சனையை சரிசெய்ய பாண் டியாறு - மாயாறு திட்டத்தை அரசு செயல்ப டுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம்:நகைக்கடை நடத்தி 100 கோடி ரூபாய் மோசடி

சேலம், நவ.17- நகைக்கடை மூலம் கவர்ச்சிக ரமான திட்டங்களை அறிவித்து, 6 மாவட்ட பொதுமக்களை ஏமாற்றி ரூ.100 கோடி வரை மோசடி செய்த  சம்பவத்தில் தொடர்புடைய 18 பேரை பாதிக்கப்பட்டவர்கள் பிடித்து, ஒப்ப டைத்தனர். சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி, கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் எஸ்விஎஸ் என்னும் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடைகளின் பெயரில். மாதந்தோறும் சிறு சேமிப்பு மூலம் நகை, பழைய நகைக்கு புதிய நகை வழங்கும் திட்டம் உள்ளிட்டவைகள் மூலம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்யப்பட்டது. இந்நிலையில், எவ்வித அறிவிப்புமின்றி தீபாவளி முதல் அனைத்து கிளைகளும் பூட்டப் பட்ட நிலையில், அதன் உரிமையாளர் சபரி சங்கர் தலைமறைவானார்.  இந்நிலையில், கடையில் மேலா ளர்களாக செயல்பட்ட 18 பேரை, பாதிக்கப்பட்டவர்கள் பிடித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும், பணத்தை ஏமாற்றி சென்ற கடையின் உரிமையா ளரை உடனடியாக பிடிக்க வேண்டும்  என வலியுறுத்தி ஆட்சியர் அலுவல கம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி இதேபோன்று, தருமபுரி, அன்னசா கரம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர்,  ரூ.28.66 லட்சத்தை இந்த நிறுவனத்தில்  இழந்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குமார், மாவட்ட குற்றப்பி ரிவு காவல் நிலையத்தில் புகாரளித்தார்.  அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

வாகன பேரணி

கோவை, நவ.17- திமுக இளைஞர் அணி யின், மாநில உரிமை மீட்பு  மாநாட்டையொட்டிய இரு சக்கர வாகன பேரணி கோவை வந்தடைந்தது.  நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, திமுக இளைஞர் அணி சார்பில் சேலத்தில் மாநாடு நடைபெற உள்ளது.  இந்த மாநாட்டின் நோக்கம் குறித்து தமிழகம் முழுவதும் கொண்டு செல்லும் வகை யில்,  188 இருசக்கர வாகனப் பேரணியை கன்னியாகு மரியில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத் த்தார். அந்த பேரணி கோவை  வந்தடைந்தது. இப்பேர ணியை, மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த் திக் உள்ளிட்டோர் வரவேற் றனர்.