districts

விவசாயிகளிடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மோசடி

நாமக்கல், டிச. 14- திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங் கத்தில் விவசாயிகளிடம் ஒன்றரை  கோடி பண மோசடி நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரனை மேற்கொண்டு வருகின் றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங் கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம் கோக்கலை ஊராட்சி யில், கோக்கலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங் கம் செயல்பட்டு வருகிறது. இந்த  கூட்டுறவு கடன் சங்கத்தில் இருந்து,  விவசாயிகளுக்கு கடன் நிலுவை கட்ட வேண்டும் என்று கடிதம் வந் துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி யடைந்த விவசாயிகள், தாங்கள் கடனை சரியாக கட்டி வருகிற நிலை யில் நோட்டீஸ் ஏன் அனுப்பப்பட் டது என தெரியாமல் திகைத்தனர். இதுகுறித்து கோக்கலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்று கேள்வி எழுப் பியுள்ளனர்.  இதுகுறித்த விசாரிக்கையில், கடன் கட்ட கொடுத்த பணம், டெபா சிட் பணம், நகை கடனில் கூடுத லாக பெற்ற பணம் என சுமார் 1.50  கோடி ரூபாய் அளவுக்கு மோசடி  நடந்தது தெரிய வந்தது. விவசாயி களிடம் ஒன்றரை கோடி வரை ரூபாய் வரை கூட்டுறவு கடன் சங் கத்தில் வேலை செய்யும் பெரிய சாமி என்பவர் பெற்று, பண மோசடி செய்துள்ளதாக தெரிய வந்துள் ளது.  

இச்சம்பவம் பரபரப்பாக பேசப் பட்ட நிலையில், கூட்டுறவுத்துறை  அதிகாரிகள் விசாரணை மேற் கொண்டனர். இதில், கணக்குகள் மற்றும் கணினிகள் நகை வைப்பு  அறைகள் ஆகியவற்றில் சோதனை மேற்கொண்டபோது மோசடி நடைபெற்றது தெரியவந் துள்ளது.   இதனைத்தொடர்ந்து தலை மறைவாக இருந்த கடன் சங்க  உதவி செயலாளர் பெரியசாமியை  பிடித்து வந்தனர். பின்னர், திருச் செங்கோடு கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் இந்திரா விசாரணை மேற்கொண்டு வருகி றார். டெபாசிட் தொகையில் பெற்ற  கடனை கூடுதலாக்கியும், முதிர்ச்சி யடைந்த டெபாசிட் பணத்தை சேமிப்பு கணக்கில் போட்டு வைத்தி ருந்ததை, மோசடியாக ஏமாற்றி எடுத்திருப்பதும், பெண்களின் சேமிப்பு கணக்கில் இருந்து பணத்தை மோசடியாக எடுத்திருப் பதும், குறைவான தொகைக்கு அட மானம் வைத்த நகைகளின் மீது  கூடுதல் தொகை எடுத்திருப்பதும் முதற்கட்ட விசாரனையில் தெரிய வந்திருப்பதாக தெரிகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடை யவர்கள் யார் யார் எப்பொழுதிலி ருந்து இந்த மோசடி நடந்து வருகி றது சங்கத்தின் நிர்வாகிகள் யாருக் காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். விவ சாயிகளின் பெயரில் 1.50 கோடி  ரூபாய் தொடக்க வேளாண்மை கூட் டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற மோசடி எலச்சிபாளையம் வட்டா ரத்தில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.