மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு முன்னாள் உறுப்பினர் தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா மறைவையொட்டி வெள்ளியன்று (ஆக.9) தா.பி.சத்திரத்தில் அண்ணா நகர் பகுதி சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. பகுதிக்குழு உறுப்பினர் த. சுகுமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பகுதிச் செயலாளர் கே.மகேந்திரவர்மன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ப.சுந்தரம், கே மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.