districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

காட்டுயானை தாக்கி மூதாட்டி பலி - யானையை கண்காணிக்க 4 குழுக்கள் அமைப்பு

உதகை, நவ.23- தேவாலா அருகே காட்டுயானை தாக்கி மூதாட்டி உயிரி ழந்த நிலையில், அந்த யானையை கண்காணிக்க 4  குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என வனத்துறை சார்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், தேவாலா அருகே உள்ள வாழவயல்  பகுதியில் பாப்பாத்தி என்ற மூதாட்டி யானை தாக்கி உயிரி ழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொது மக்கள், யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும்  என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின் பொதுமக்களிடம், மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். மேலும், தலைமை வன உயிரின பாதுகாவலர் வெங்கடேஷ்  தலைமையில் அதிகாரிகள், வன பணியாளர்கள் உள்ளிட்ட  60 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர்  வனத்திற்குள் சென்று, யானையின் நடமாட்டத்தை  கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே தொடர்ந்து  குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி திரியும் காட்டு யானையை பிடிப்பது குறித்து, முதுமலை புலிகள் காப்பக கள இயக்கு நர் வெங்கடேஷ் தலைமையில் நாடுகாணி பகுதியில் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கூடலூர், பந்த லூர் மற்றும் நாடுகாணி வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில், யானையை பிடிக்க முதுமலையிலிருந்து விஜய்,  வசீம் என்ற 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் யானையை  தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே அந்த யானை தேவாலா நீர்மட்டம் பகுதியில் தமிழக - கேரளா எல்லை  வனப்பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டது. இரவு நேரத்தில் இந்த யானை ஊருக்குள் வரலாம் என்பதால் யானையை இரவு நேரத்திலும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், மேற்கண்ட யானை கடந்த 2 நாட்களாக கூடலூர் பகுதியில் அடிக்கடி  செல்லும் இடங்களில் தென்படவில்லை. யானையை கண் காணித்த போது கேரள எல்லைக்கு அருகே ஒரு கூட்டத் துடன் நிற்பது கண்டறியப்பட்டது. இதற்கிடையே யானையை கண்காணிக்க 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. யானையை பிடிப்பதற்கு வாய்ப்புகள் இருப்பின் 5 ஆவது குழுவான டிராக்கிங் குழு, அந்த இடத்திற்கு சென்று யானையை பிடிப்ப தற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். மேலும், யானையை பிடிக்க கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட வனத்துறை சிறப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட உள்ள னர், என்றனர்.

சாய ஆலைக்கு சீல்

நாமக்கல், நவ.23- பள்ளிப்பாளையம் அருகே உள்ள குமரன் நகரில் செயல்படும் சாய ஆலைகளி லிருந்து வெளியேறும் சாயக் கழிவு நீர் ரசாயன நெடியால், அப்பகுதி மக்கள் வாச பிரச் சனையால் மிகவும் அவதி படுகின்றனர். இதுகுறித்து குமாரபாளையம் மாசுகட்டு பாட்டு வாரியம், வருவாய் துறை அதிகாரிகளுக்கு தக வல் தெரிவிக்கப்பட்டது. அதி காரிகள் அங்கு வந்து விசா ரணை நடத்தி, நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் உத்தர வின்பேரில் சாய ஆலைக்கு, சீல் வைக்கப்பட்டது.

வால்பாறை அருகே சிறுத்தை நடமாட்டம் பாதுகாப்பாக இருக்க வனத்துறை அறிவுறுத்தல்

கோவை, நவ. 23- வால்பாறை அருகே சிறுத்தைகள் நட மாட்டம் இருப்பதால், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதி கேரளா எல்லையான மழுக்குப் பாறை அதிரப்பள்ளி போகும் வழி உள்ளது. இங் குள்ள மலைப்பாதை பத்தடி பாலம் வனப் பகுதியில் சிறுத்தை நடமாடி கொண்டிருப் பதை அவ்வழியாகச்  சென்ற சுற்றுலா பயணி கள் பார்த்துள்ளனர். சிறுத்தை அதே இடத்தில் நீண்ட நேரமாக உலா வருவதை கண்ட  சுற்றுலா பயணிகள்  மழுக்கு பாறை வனத் துறை சோதனைச் சாவடிக்கு  தகவல் தெரி வித்தனர். இதையடுத்து அதிரப்பள்ளி  வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் சிறுத்தை நட மாட்டம் உள்ளது. அவ்வழியாக யாரும் செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். பகலில் சிறுத்தை நட மாட்டம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் செல்கின்றனர். மேலும், சிறுத் தையை சுற்றுலா பயணிகள் எடுத்த வீடியோ  தற்போது சமூக வலைதளங்களில் வைர லாகி வருகிறது.

அவிநாசியில் ஆண் சடலம் மீட்பு

அவிநாசி, நவ.23- அவிநாசி சங்கமாங்குளத்திலிருந்த ஆண் சடலத்தை  மீட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின் றனர், அவிநாசி வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள சங்க மாங்குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்ப தாக போலீசாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.  இதையடுத்து சம்பவயிடத்திற்கு சென்ற போலீஸார், அவி நாசி தீயணைப்புத் துறையினர் நீரில் மிதந்த சடலத்தை கயிறு  கட்டி மீட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் 35  வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண், சபரி  மலைக்கு மாலை அணிந்த நிலையில் நீலக் கலர் மேல் சட்டை,  வேட்டி உள்ளிட்டவை அணிந்துள்ளார். 3 நாள்களுக்கு முன்  உயிரிழந்திருக்கலாம் என போலீஸôர் சந்தேகின்றனர். யார்,  எந்த ஊரைச் சேர்ந்தவர் என அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். மீட்கப்பட்ட சடலம் பிரேத பரி சோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைக்கப்பட்டது.

ஊராட்சி நிர்வாகத்தால் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வலியுறுத்தல்

திருப்பூர்,23- ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி நிர் வாகத்தால் கொட்டப்படும் குப்பைக ளால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை  தடுத்து நிறுத்த தமிழ்நாடு விவசாயிகள்  சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் வருவாய் கோட் டாட்சியாளர் அலுவலகத்தில் புதன்கி ழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின்  வடக்கு ஒன்றிய செய லாளர் எஸ்.அப்புசாமி சார்பில் கொடுக் கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:  திருப்பூர் வடக்கு சட்டமன்ற  தொகுதிக்குட்பட்ட திருப்பூர் ஊராட்சி  ஒன்றியம் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சியைச் சார்ந்த 7 ஆவது வார்டு முட்டியங்கினர் பகுதியில் புலா எண்  312 ல் 12 ஏக்கர் பரப்பு உள்ள வாரி புறம் போக்கு குட்டையில் கொட்டப்படும் குப் பைகளால் திறந்தவெளி கிணறுகளும்,  ஆழ்குழாய் கிணறுகளிலும் உள்ள நீர்  மாசடைந்து மக்கள் பயன்படுத்த முடி யாத சூழ்நிலையை உருவாக்கியுள் ளது. எனவே ஊராட்சி நிர்வாகம்  குப்பைகளை கொட்டுவதை தடுத்து  நிறுத்தி குட்டையை சுத்தம் செய்ய வலி யுறுத்தப்பட்டுள்ளது.  மேலும் பொங்குபாளையம் ஊராட் சிக்குட்பட்ட பரமசிவம்பாளையம், மாரப்பன்பாளையம் புதூர், பள்ளிபா ளையம், காளம்பாளையம், பொங்கு பாளையம் அருகில் உள்ள மாநகராட் சியைச் சார்ந்த செட்டிபாளையம், ஒட்ட பாளையம், அன்னையம்பாளையம், கூத்தம்பாளையம் மற்றும் பழங்கரை  ஊராட்சியைச் சார்ந்த பெரியாயிபாளை யம், பச்சாம்பாளையம், வேதூர் ஆகிய  பகுதிகளுக்கு அருகாமையில் உள்ள பொங்குபாளையம் ஊராட்சிப் பகு தியை மையமாகக் கொண்டு புதிய கால் நடை மருத்துவமனை அமைக்கக்  கோரியுள்ளது. மேலும் பொங்குபாளையம், காலம் பாளையம் ஊராட்சி சேர்ந்த ரேசன் கடை  அமைந்துள்ள கட்டிடம் பழுதடைந்து  மிகவும் மோசமாக இடிந்து விழக்கூடிய  அபாய நிலையில் இருப்பதால் புதிய  ரேசன் கடை கட்டிடம் கட்டுவதற்கு உரிய  நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டுள் ளது.

நண்பர் இறந்த துக்கம் தாளாமல் முதியவர் பலி

திருப்பூர், நவ.23- திருப்பூரில் நண்பர் இறந்த துக்கம் தாளாமல் முதியவர்  பேருந்து முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.  திருப்பூர் மாநகர் மண்ணரை பகுதியை சேர்ந்தவர் சுப்ரம ணியம் (75) இவர் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே  உள்ள தனியார் உணவகத்தில் காசாளராக பணியாற்றி வந் தார். இவரது பால்ய நண்பர் சுப்ரமணி என்பவர் அப்பகுதி யில் தனியார் திரையரங்கம் நடத்தி வந்தார். இருவரும் நண்பர் களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம்   திரையரங்க உரிமையாளர் சுப்ரமணியம் மாரடைப்பு கார ணமாக உயிரிழந்தார். அதனை ஏற்க முடியாத சுப்ரமணி யம் மனமுடைந்து காணப்பட்டார். புதனன்று சுப்ரமணியம் மீது  திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி நோக்கி சென்ற தனியார்  பேருந்து மோதி உயிரிழந்தார்.  பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் அவர் பேருந்தின் முன்பாக படுத்து உயிரை  மாய்த்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

இன்று மின்தடை

திருப்பூர், நவ.23- பல்லடம் அருகேயுள்ள  கரடிவாவி துணை மின் நிலை யத்தில் மாதாந்திர பராம ரிப்பு பணிகள் நடைபெறவுள் ளதால் கீழ்க்கண்ட பகுதி களில் வியாழக்கிழமை நவ. 24 தேதி காலை 9 மணி முதல்  மாலை 5 மணி வரை மின்சார  விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளர் ரத்தின குமார் தெரிவித்துள்ளார். மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: கரடிவாவி, கரடிவாவிபு தூா், செலக்கரச்சல், அப்ப நாயக்கன்பட்டி, அப்பநா யக்கன்பட்டிபுதூா், கோடங் கிபாளையம், மல்லேகவுண் டபாலையம்,ஊத்துக்குளி, வேப்பங்குட்டைபாளையம், புளியம்பட்டி, கே.கிருஷ்ணா புரம், மத்தநாயக்கன்பாளை யம், அய்யம்பாளையம், ஆறாக்குளம், கே.என்.புரத்தின் ஒரு பகுதி, பரு வாயின் ஒரு பகுதி.

மஞ்சூர்: அச்சுறுத்தி வந்த கரடி சிக்கியது

உதகை, நவ.23- மஞ்சூர் பகுதியில் அச்சுறுத்தி வந்த கரடி கூண்டில் சிக்கி யது. இதையடுத்து அந்த கரடி முதுமலை வனப்பகுதியில் விடப்பட்டது நீலகிரி மாவட்டம் 65 சதவீதத்திற்கும் அதிகமாக வனப்பகு தியை கொண்டுள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக உதகை, கோத்தகிரி, குன்னூர், கூடலூர், ஓவேலி ஆகிய வனப் பகுதியில் இருந்து வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் சில சமயங்களில் மனித - வன விலங்கு மோதல் ஏற்படுகிறது. இதை தடுக்க வனத்துறையி னர் கண்காணிப்பு பணிகளை தீவிர படுத்தியுள்ளனர். கடந்த ஒரு மாதமாக உதகையை அடுத்த மஞ்சூர் சுற்று  வட்டார பகுதிகளில் கரடி ஒன்று நடமாடி வந்தது. பகல் நேரங் களில் அருகில் உள்ள தேயிலை தோட்டங்களில் பதுங்கியிருக் கும் கரடி இரவு நேரத்தில் உணவு தேடி கடைவீதிகளில் புகுந்து  விடுகிறது. கடந்த 2 வாரத்திற்கு முன்னர் ஒரு கடைக்குள் புகுந்து முட்டைகளை குடித்து விட்டு சென்றது.  இதையடுத்து கடந்த வாரம் இரவு நேரத்தில் மஞ்சூர் பஜா ருக்குள் புகுந்த கரடி, அரசு தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள்  புகுந்தது. அங்குள்ள அங்கன்வாடி மையத்தை ஒட்டி அமைந் துள்ள சமையல் அறையின் 2 பக்க கதவுகளையும் உடைத்து  உள்ளே புகுந்தது. இதன் பின்னர் அங்கு இருந்த சமையல் எண்ணெயை குடித்து விட்டு பொருட்களை சூறையாடி சென் றது. மனிதர்களை தாக்குவதற்கு முன்னரே வனத்துறை யினர் விரைந்து செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.  இதனையடுத்து, வனத்துறையினர் மஞ்சூர் பகுதியில் சம் பவ இடத்திற்கு வந்து நேரில் ஆய்வு செய்தனர். இதன்பின் குந்தா வனச்சரகம் தாய்சோலை பிரிவு பிக்கட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மஞ்சூர் பஜார் பகுதியில் கர டியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. இந்நிலையில் புத னன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில்  அந்த கரடி கூண்டில் சிக்கியது. இதைத்தொடர்ந்து குந்தா வன சரகர் சீனிவாசன் தலை மையிலான வனத்துறையினர் முக்குருத்தி தேசிய பூங்கா,  பங்கித் தபால் வனப்பகுதிக்கு அந்த கரடியை வாகனத்தில்  ஏற்றி சென்று பாதுகாப்பாக விட்டனர். இதையடுத்து அந்த  கரடி துள்ளி குதித்து வனப்பகுதியில் ஓடி மறைந்தது.

விபத்தில்லா மாநகரமாக சேலத்தை உருவாக்க முயற்சி

சேலம், நவ.23- விபத்தில்லாத சேலம் மாநகராட்சியை உருவாக்க முயற்சி மேற்கொள்ள இருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் வடக்கு மாநகர துணை ஆணையர் மாடசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், விபத்தில்லா மாநகரமாக சேலத்தை உருவாக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் சேலம் மாநகரத்தில், அதிகளவில் விபத்துக்கள் நடந்த 75  இடங்களை தேர்ந்தெடுத்துள்ளோம் . அந்த இடங்களில் இன் னும் 2 நாட்களில் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டு, வாகன தணிக்கை செய்யப்பட உள்ளது. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டும் பள்ளி, கல்லூரி மாணவர்களால் ஏற்ப டும் விபத்துகளை தடுக்கும் வகையில், மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராதத்தொகை வசூலிப்பது மற்றும் பெற் றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். போக்கு வரத்து விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும்.  கடந்தாண்டு சேலம் மாநகரத்தில் நடந்த விபத்துகளில் 123  பேர் மரணம் அடைந்தனர். நடப்பு ஆண்டில், நவம்பர் வரை  183 பேர் விபத்தில் இறந்துள்ளனர். மேலும், இந்த ஆண்டு இது வரை போக்குவரத்து போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப் பட்டு, ரூ.6 லட்சத்து 44 ஆயிரத்து 300 அபராதம் வசூலிக்கப் பட்டுள்ளது. மேலும், விபத்துக்களை தடுக்க காவல் துறையின ரின் அறிவுரைகளை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள வேண் டும், என்றார்.

காரில் குட்கா கடத்தியவர் கைது 

கோவை, நவ.23- கோவையில், 120 கிலோ குட்கா காரில் கடத்தி வந்த மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.  துடியலூர் போலீசார் இடிக்கரை ரோடு - டீச்சர் காலனி சந்திப்பில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது குட்காவை காரில்  கடத்தி வந்த  சோமனூர் பகுதியை சேர்ந்த மளிகை கடைக்காரர்  ஜெகன் அந்தோணி ராஜேஷ்  (39) என்பவரை கைது செய்தனர். அவர் விற்பனைக்கு  வைத்தி ருந்த 120 கிலோ குட்கா  மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன்பின்னர் கைது செய்யப்பட்டு கோவை மத் திய சிறையில் அடைக்கப்பட்டார். கஞ்சா விற்றவர் கைது பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் பகுதியில் உள்ள பள்ளி அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த ரகுகுமார் (30) என்பவரை ஆழியார் போலீசார் கைது செய்த நிலையில், அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதேபோன்று  பெரியநாயக்கன் பாளையம் பகுதியில், கஞ்சா விற்ற சூலூரை சேர்ந்த தனியார் நிறுவன சூப்பர் வைசர் பாலசுப்பிரமணி (23) என்பவரையும் போலீசார் கைது  செய்தனர்.

ஆன்லைனில் வெடி மருந்து வாங்கிய நபர் கைது

என்ஐஏ விசாரணை கோவை, நவ. 23 - ஆன்லைனில் வெடி மருந்து வாங் கிய நபரை கோவை சரவணம்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர். கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருக்குமோ என்கிற கோணத் தில் என்ஐஏ போலீசார் விசாரணை மேற் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத் தியது. கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலின்  முன்பு கடந்த அக்.23 ஆம் தேதி கார்  வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் ஜமேஷா முபின் காரிலேயே உயிரிழந் தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 குற்றவாளிகளை போலீசார் கைது  விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின் னர், இவ்வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து தமிழ கம் முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை மேற் கொண்டனர். அதேபோல ஆன்லை னில் வெடி மருந்து வாங்கப்பட்ட நபர்க ளின் விபரங்களையும் போலீசார் சேக ரித்து வந்தனர். இதனிடையே, கோவில்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் (26) என்பவர், சரவ ணப்பட்டியில் தங்கியுள்ளார். இவர்,  கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆன் லைனில் வெடி மருந்து வாங்கியுள்ள விபரத்தை சரவணம்பட்டி காவல்துறை யினர் கண்டு பிடித்தனர். இதுகுறித்த விசாரணையில் இவர் மீது ஏற்கனவே கோவில்பட்டி காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக் குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, சரவணம் பட்டி காவல்துறையினர் மாரியப்பனை  பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், கோவை கார்  வெடிப்பு சம்பவத்திற்கும், மாரியப்பன் ஆன்லைனில் வெடி மருந்திற்கான மூலப்பொருட்கள் வாங்கியதற்கும் தொடர்பு இருக்குமோ என்கிற கோணத் தில் என்ஐஏ போலீசார் புதனன்று விசா ரணை மேற்கொண்டனர். இதில், தனி நபர் முன்விரோதம் காரணமாக தாக்கு தல் நடத்த இந்த மூலப்பொருட்களை வாங்கி சென்னையில் உள்ள ஒருவரி டம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது. இதனையடுத்து என்ஐஏ போலீ சார் இவ்வழக்கில் இருந்து விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பி னும் சரவணம்பட்டி போலீசார் மாரியப் பனை கைது செய்து, சென்னையில்  யாருக்கு இந்த வெடி பொருட்களுக் கான மூலப்பொருட்களை வாங்கி கொடுத்தார் என விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

மின்தடை

ஈரோடு, நவ.23- சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந் திர பராமரிப்புப்பணி வியாழ னன்று (இன்று) நடைபெற வுள்ளது. இதனால் பெருந் துறை கோட்டத்தைச் சார்ந்த  சென்னிமலை நகர் பகுதி முழு வதும், பூங்கா நகர், பாரதி நகர், சின்ன பிடாரியூர், ஊத் துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமரபுரி, சக்தி நகர், பெரி யார் நகர், நாமக்கல்பாளை யம், அரச்சலூர் ரோடு, குப் பிச்சிபாளையம், வெப்பிலி, கே.ஜி.வலசு, பசுவப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9  மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.