districts

img

ஓய்வில்லாமல் தொடர்ந்து பேருந்தை இயக்க நிர்பந்தம் போக்குவரத்து ஊழியர் தீக்குளிக்க முயற்சி

கோவை, ஜன. 10- சூலூர் போக்குவரத்து கழக பணி மனையில், பணிசுமை காரணமாக நடத் துநர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. கோவை மாவட்டம், சூலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தைச்  சேர்ந்த போக்குவரத்து சங்க ஊழியர் கள், கடந்த இரண்டு நாட்களாக தொடர்  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட் டனர்.  இந்நிலையில் கடந்த 2 நாட்களாக போக்குவரத்து பணிமனை நிர்வாகம், தனக்கு கூடுதல் வேலை தருவதாக கூறி தேனியைச் சேர்ந்த நடத்துநர் பிர தீப் என்பவர் புதனன்று மதியம் பணிம னையில்  டீசலை ஊற்றி தற்கொலைக்கு  முயற்சித்துள்ளார். பணி முடிந்து வீட் டுக்கு திரும்பும் பொழுது மீண்டும் பணி  செய்ய வேண்டும் என பேருந்து பணி மனை நிர்வாகத்தினர் தெரிவித்த நிலை யில், தனக்கு உடல் அசதி அதிகமாக உள்ளதால் நாளை வருவதாக பிரதீப்  கூறியதாக தெரிகிறது. இதற்கு கட்டா யம் பணி செய்ய வேண்டும் என பணி மனை நிர்வாகம் நிர்பந்தித்துள்ளது. இதனால் மனமுடைந்த நடத்துநர் பிர தீப் பணிமனையில் இருந்த டீசல் பம்பை  தன் உடலில் பீச்சியடித்து தீக்குளிக்க முயற்சித்தார்.  இதனைப் பார்த்து அருகில் இருந்த சக ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத் தினர். தகவலின் பேரில் சம்பவ இடத் திற்கு வந்த சூலூர் போலீசார், பிரதீப்பை  மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, போக்குவரத்து ஊழியர்கள்  பேருந்து பணிமனை முன்பாக திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் கார ணமாக பேருந்து பணிமனை முன்பாக  ஏராளமான அதிவிரைவு படை போலீ சார் குவிக்கப்பட்டனர். பணிச்சுமை கார ணமாக பேருந்து நடத்துநர் ஒருவர்  தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்ப குதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.