districts

ஊராட்சி பணியாளர்களுக்கு கிருமிநாசினி வழங்கல்

தரங்கம்பாடி, மே 6-
செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஊராட்சி  அலுவலர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கும் பணியை எம்.எல்.ஏ பவுன்ராஜ் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 57 ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் சத்து மாத்திரைகளை இலவசமாகவும், 250 மில்லி எடை கொண்ட கை சுத்தம் செய்யும் கிருமிநாசினி ரூ.150 என்றும் விற்பனையை தொடங்கி வைத்தார்.