திருப்பூர், டிச.23- தொகுப்பூதிய அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி திருப்பூர், தாராபுரத்தில் சத்துணவு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில செயற்குழு முடிவின்படி அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தொகுப்பூதியம் ரூ.3000 ல் சமையல் உதவியாளர் நியமன அர சாணை எண் 95 - ஐ ரத்து செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழி யர்களைக் கொண்டே நடத்த வேண்டும், சத் துணவு ஓய்வூதியர்களுக்கு மாதம் 7850 ஓய்வூ தியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி திங்களன்று தன்னெ ழுச்சி போராட்டம் நடைபெற்றது. திருப்பூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநகராட்சி கிளை சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதிலட்சுமி தலைமை ஏற்றார். மாநகராட்சி கிளைச் செயலாளர் சகுந் தலா விளக்க உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தெற்கு வட்டக்கிளை நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றி னார். மாநகராட்சி அலுவலகம் முன்பு நடை பெற்ற இந்த போராட்டத்தில் சத்துணவு ஊழி யர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். பொருளாளர் சுமதி நன்றி கூறினார். தாராபுரம் தாராபுரத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் முன்பு நடைபெற்ற இந்த கண்டன இயக் கத்திற்கு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றியத் தலைவர் கே. ரத்தினம் தலைமை ஏற்றார். துணைத் தலைவர் சந்திரலேகா வரவேற் றார். செயலாளர் என்.பத்மா கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் வசந்தாமணி, ஒன்றிய நிர்வாகி கள் சுஜாதா, செல்வம் உட்பட 80க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்டத் தலைவர் ஏ.ஜெயந்தி போராட்டத்தை நிறைவு செய்து வைத்து பேசினார். திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாநக ரம், தாராபுரம் ஒன்றியம் தவிர, மூலனூர், அவி நாசி, பொங்கலூர், மடத்துக்குளம், உடு மலை, குடிமங்கலம் ஒன்றியங்கள் என மொத் தம் எட்டு இடங்களில் இந்த போராட்டம் நடை பெற்றுள்ளது. ஏறத்தாழ 750 பேர் இதில் கலந்து கொண்டனர்.