ஈரோடு: கடன் பெற்றவரை மிரட்டும் நிதி நிறுவனம்
ஈரோடு, ஜன.2- கொடுமுடி அருகே வீட்டு அடமான கடன் பெற்றவரை மிரட்டிய நிதி நிறுவ னத்தின் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சி யர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர் கள் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட் டம், கொளாநல்லி கருங்காடு பகுதி யைச் சேர்ந்த கனகலட்சுமி சிவராஜ். இவர் பைவ் ஸ்டார் மைக்ரோ பைனான்ஸ் மூலம் வீட்டு அடமான கட னாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுண் ளார். ரூ.4337 வீதம் 60 தவணைகளில் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். இவ்வாறு பிரதி மாதம் 5ஆம் தேதிக் குள் தவணை தொகையை செலுத்தி வந் தார். இவ்வாறு 14 தவணைகள் செலுத் தியுள்ளார். இந்நிலையில், தனது குடும்ப உறுப்பினர்களுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் டிசம் பரில் குறிப்பிட்ட தேதியில் தவணை செலுத்த இயலவில்லை என தெரிகிறது. இந்நிலையில், பைவ் ஸ்டார் நிதி நிறுவ னத்தினர் இரவு நேரத்தில் செல்போனில் அழைத்து தகாத வார்த்தைகளில் பேசி மிரட்டியுள்ளனர். இந்த உரையாடல் பதிவு சமூக வலைதளங்களில் வெளி யானது. இதனைத்தொடர்ந்து, திங்களன்று ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் கனக லட்சுமி மனு அளித்துள்ளார். இதில், வீட்டில் குழந்தைகள் தனியாக இருந்த போது, நுழைந்து வீட்டு சாவியைக் கொடு என்று தொந்தரவு செய்தனர் எனவும், செல் பேசி மிரட்டலையும் தெரி வித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார்.
சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
தருமபுரி, ஜன.2- அண்ணாமலைப்பட்டியிலிருந்து எட்டிப்பட்டி வரை செல்லும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர். தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், நவலை ஊராட்சிக்கு உட்பட்டது எட்டிப்பட்டி கிராமம். இக் கிராமத்தில் சுமார் 100 விவசாய குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். விவசாய விளை பொருட்களை ஏற்றிச் செல்லவும், அன்றாட தேவைகளுக்காகவும் எட்டிப்பட்டியி லிருந்து அண்ணாமலைப்பட்டி வரை செல்லும் மண் சாலையை பயன்படுத்தி வந்தனர். இந்த மண் சாலையில் மழைக்காலங்கள் மற்றும் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் காலங்களில் வண்டி வாகனங்கள், கனரக வாகனங்கள் செல் வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இந்த மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டுமென பொதுமக்கள் நீண்ட கால மாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அண்ணா மலைப்பட்டியிலிருந்து எட்டிப்பட்டி செல்லும் மண் சாலை சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலையாக அமைக்கப் பட்டது. இந்த தார் சாலை தற்போது தார் மற்றும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாகவும், மேடு பள்ளங்கள் நிறைந் தும் காணப்படுகிறது. இதனால் இந்த சாலையை கடக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வரு கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவ டிக்கை எடுத்து பழுதடைந்த தார் சாலையை சீரமைக்க வேண் டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நடக்க இருப்பவை
மாவட்டக்குழு உறுப்பினர்கள், முழு நேர ஊழியர்களுக்கான வகுப்பு நாள்: 3.1.2023, செவ்வாய்க்கிழமை. நேரம்: காலை 10 மணி. இடம்: மாவட்டக்குழு கூட்ட அரங்கம், ஈரோடு தலைப்பு: இயக்கவியல் அணுகுமுறையில் நம் பணிகள் ஆசிரியர்: என்.குணசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர். கட்சி திட்டம் ஆசிரியர் : அன்வர் மாநில கல்விக்குழு ஏற்பாடு: சிபிஎம், மாவட்டக்குழு, ஈரோடு.
பெண்களுக்கும் இரவு சொந்தம் என புத்தாண்டு கொண்டாடிய மாதர் சங்கத்தினர்
திருப்பூர், ஜன.2- வன்முறை இல்லா புத்தாண்டு வரவேற்போம், உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் இரவு சொந்தம், பெண் களுக்கு? என்ற முழக்கத்துடன் சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் புத் தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தியாகி பழனிச்சாமி நினைவு அலுவலகத்தில் இருந்து பேர ணியாக புறப்பட்டு வன்முறையற்ற புத்தாண்டே வருக! என கோஷமிட்டு 70க்கும் மேற்பட்ட பெண்கள் புஷ்பா தியேட்டர் ரவுண்டானாவை சென்றடைந்தனர். கேரளாவில் நடக்கும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 13ஆவது அகில இந்திய மாநாடு சிறக்கட்டும், மாநாட்டு கோரிக்கைகள் வெல் லட்டும், என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நள்ளிரவு 12 மணிக்கு வானவேடிக்கைகள் வெடிக்க, உறு திமொழி ஏற்று கேக் வெட்டி வன்முறையில்லாத புத்தாண்டு 2023 வர வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங் கத்தினர் புத்தாண்டை வரவேற்றனர்.
சாலையில் புத்தாண்டு வாசகம் எழுதியபோது கார் மோதி கல்லூரி மாணவர் பலி 2 பேர் படுகாயம்
தாராபுரம், ஜன.2- தாராபுரம் அருகே சாலையில் புத்தாண்டு வாசகம் எழுதிய போது கார் மோதி விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாராபுரம் கரூர் செல்லும் சாலையில் எம்ஜிஆர் நகர் உள்ளது. புத்தாண்டிற்கு முன்தினம் இரவு சுமார் 12 மணியள வில் எம்ஜிஆர் நகரை சேர்ந்த வாலிபர்கள் புத்தாண்டை கொண்டாடினர். பின்னர் புத்தாண்டு வாழ்த்துகள் என்ற வாச கத்தை சாலையில் எழுதுவதற்கு அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் தனுஷ் (19), பெட்ரோல் பங்க் ஊழியர் ஜீவா னந்தம் (19) பள்ளி மாணவர் கவினேஷ் (14) ஆகியோர் சுண் ணாம்பு கொண்டு எழுதிக்கொண்டிருந்தனர். அப்போது தாரா புரத்தில் இருந்து மூலனூர் நோக்கி சென்ற கார் ஒன்று வேக மாக வந்து கண் இமைக்கும் நேரத்தில் சாலையில் எழுதிக் கொண்டிருந்த 3 பேர் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச் சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக் கப்பட்டனர். அங்கு கல்லூரி மாணவர் தனுஷ் சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். மற்ற 2 பேரும் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து சிசி டிவி பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ. 47 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
தாராபுரம், ஜன.2- மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ. 47 லட்சத் திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூட முதுநிலை செயலாளர் ஆர்.பாலச்சந்திரன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மூலனூர் ஒழுங் குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கருர், திருச்சி, திண்டுக் கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த 239 விவசா யிகள் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்த னர். அதேபோல் பருத்தியை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். அதிக பட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ. 7 ஆயிரத்து 419 க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ. 5 ஆயிரத்து 500 க்கும் சராசரி விலையாக ரூ. 6 ஆயிரத்து 250 க்கும் விலை போனது. மொத்தம் 2263 மூட்டைகள் 788 குவிண்டால் பருத்தி ரூ. 47 லட்சத்து 53 ஆயிரத்து 99 க்கு விற்பனையானது. இந்த ஏலத் தில் 14 வணிகர்கள் பங்கேற்றனர். ஏலத்திற்கான ஏற்பாடு களை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.
நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைவு
திருப்பூர், ஜன.2 - திருப்பூரில் பின்னலாடை உற்பத் திக்கு பயன்படும் பருத்தி நூல் விலை 2023 புத்தாண்டு தொடங்கியுள்ள நிலை யில் கிலோவுக்கு ரூ.20 குறைக்கப்பட் டுள்ளது. பின்னலாடை உள்ளிட்ட ஜவுளித் தொழிலுக்கு மூலாதாரப் பொருளாக இருப்பது பருத்தி நூல். இதன் விலை கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் மிகக்கடுமையாக உயர்ந்து வந்தது. இதனால் பின்ன லாடை, விசைத்தறி உள்ளிட்ட ஜவுளி உற்பத்தித் தொழில்கள் நிலைகு லைந்து போயின. குறிப்பாக திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இத னால் மிகவும் பாதிக்கப்பட்டன. இத்துடன் அமெரிக்கா, ஐரோப் பிய ஒன்றிய நாடுகளிலும் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து ஏற்றுமதி சந் தையும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பின்னலாடை உற்பத்தி தொழில் வர லாறு காணாத நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இயல்பா கவே நூல் தேவை தேக்கம் அடைந்தது. அத்துடன் புதிய பருத்தி ஆண்டு வரு கைக்கு முன்பாக நூல் விலை இறங்கு முகமாக குறையத் தொடங்கியது. விலை குறைந்தாலும் ஜவுளி உற்பத்தி வழக்கமான அளவில் நடைபெற வில்லை. இந்த நிலையில் ஜனவரி மாதம் தொடங்கிய நிலையில் திங்களன்று பருத்தி நூல் விலையை நூற்பாலை கள் நிர்ணயித்து அறிவித்துள்ளன. இதன்படி பின்னலாடை தயாரிப்புக்கு பயன்படும் அனைத்து ரகங்களும் கிலோ வுக்கு ரூ.20 வீதம் குறைக்கப்பட்டுள் ளது. ஒரு கிலோ 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.253-க்கும், 24-ம் நம்பர் ரூ.265- க்கும், 30-ம் நம்பர் ரூ.275-க்கும், 34-ம் நம் பர் ரூ.295-க்கும், 40-ம் நம்பர் ரூ.315-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.245-க்கும், 24-ம் நம்பர் ரூ. 255-க் கும், 30-ம் நம்பர் ரூ.265-க்கும், 34-ம் நம்பர் ரூ. 285-க்கும், 40-ம் நம்பர் ரூ.305-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக் கப்பட்டுள்ளது. இது சற்று ஆறுதல் தருவதாக இருந் தாலும், தற்போதுள்ள சூழலில் இது பின் னலாடை, விசைத்தறி தொழில் துறையி னருக்கு பயனளிக்குமா என்று நிச்சய மாக கூற முடியாத நிலையில் உற்பத்தி யாளர்கள் உள்ளனர். நூல் விலை குறைந்தாலும் எதிர்பார்த்த ஆர்டர்கள் வராத நிலையில் பின்னலாடை தொழில் வளர்ச்சி என்பது வேகமடையாது என்று இத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின் றனர்.
ஜன.3 ஆம் தேதி மின் இணைப்புகளுடன் ஆதார் இணைக்க சிறப்பு முகாம்
உடுமலை, ஜன.2- உடுமலையில், ஜன.3 ஆம் தேதி மின் இணைப்புகளுடன் ஆதார் எண்களை இணைக்க சிறப்பு முகாம்கள் நடைபெறு கிறது. உடுமலை மேற்கு பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் வீட்டு உப யோகம். கைத்தறி , விசைத்தறி , விவசாயம் ஆகிய மின் இணைப்புகளுக்கு ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம் கள், போடிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம், குரல்குட்டை ஊராட்சி மன்ற அலுவலகம், ஆலாம்பளையம் ஊராட்சி மன்ற அலுவலகம், ராகல்பாவி ஊராட்சி மன்ற அலுவலகம், மலை யாண்டிப்பட்டணம் சுயநிதிக்குழு அலுவலகம் ஆகிய இடங் களில் ஜன 3 ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 9 மணிமுதல் நடைபெற உள்ளது. மின் நுகர்வோர் தங்களின் மின் இணைப் புகளுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளுமாறு உடு மலை செயற்பொறியாளர் மூர்த்தி வெளியிட்டுவுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.
அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை
நீர்மட்டம்:51.44/60அடி
நீர்வரத்து:817கன அடி
வெளியேற்றம்:865கன அடி
அமராவதி அணை
நீர்மட்டம்: 89.34/90அடி.
நீர்வரத்து:409கனஅடி
வெளியேற்றம்:588கன அடி
நிலக்கடலை ஏலம்
அவிநாசி, ஜன.2- சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில், 280 மூட்டைகள் வந்திருந் தன.மொத்தம் ரூ.9 லட்சத் திற்கு ஏலம் நடைபெற்றது. இதில் 6 வியாபாரிகள், 25 விவசாயிகள் பங்கேற்றனர்.
ஈஷா மையத்தை விசாரிக்க போலீசார் தயங்குவது ஏன்?
கோவை, ஜன.2- சுபஸ்ரீ மரணத்தில் ஈஷா யோகா மையத் தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க போலீசார் தயங்குவது ஏன் என சுபஸ்ரீ மர ணத்திற்கு நீதி கேட்ட ஆர்ப்பாட்டத்தில் தலை வர்கள் கேள்வி எழுப்பினர். ஈஷா யோகா பயிற்சி மையத்திற்கு சென்ற திருப்பூரைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற பெண், டிச.18 ஆம் தேதியன்று அங்கிருந்து தப்பித்து சென்றார். இந்நிலையில், சுபஸ்ரீ ஈஷா மையத் திற்கு அருகே உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இதனிடையே அப்பெண் ணின் உடலை அவசர அவசரமாக உடற்கூ ராய்வு செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து திங்களன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்காரிய மற்றும் முற் போக்கு இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஈஷா யோகா மையத் தில் நடைபெறும் அடுத்தடுத்த அதிர்ச்சி யூட்டும் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்க வேண்டும். சுபஸ்ரீ மரணத் தில் நீதி விசாரணை வேண்டும் ஆகிய கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டது. பி.ஆர்.நடராஜன் எம்.பி., தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப் பினர் கே.காமராஜ் பேசுகையில், 13 நாட்கள் கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட சடலம் எப்படி முழு உடலாக கிடைக்கப்பெற்றது என்பதே முதல் சந்தேகம். ஈஷா யோகா பயிற்சி மையத் திலிருந்து வெளியேறிய பெண் ஏன் அச்சத் தில் ஓடுகிறார். இந்த கோணத்தில் ஈஷா யோகா மையத்தில் இருந்து விசாரணை நடத்த போலீசார் தயங்க வேண்டியது ஏன். அங்கு பயிற்சி நடத்திய ஆசிரியர்கள், பயிற்சி யில் பங்கேற்றவர்கள், நிர்வாகத்தினர் மீதான அணுகுமுறை, நடவடிக்கைகள் சம்பந்தமான விசாரணை குறித்து தெளிவுபடுத்த வேண்டும். கூடுதலாக நமக்கு காவல் துறையினரின் மீதும் சந்தேகம் ஏற்பட வைக்கிறது. மேலும், ஞாயிறன்று காவல்துறை அவசரமாக பிரேத பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசி யம் என்ன? என்று சிபிஎம் கேள்வி எழுப்பி யது. அந்த கேள்விகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க வேண்டும். குற்றப்பின்னனியை விசாரித்து குற்றவாளி களின் மீது கிரிமினல் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும், என்றார். ஆதித்தமிழர் பேரவையின் பொதுச்செய லாளர் ரவிக்குமார் பேசுகையில், ஒரு தனி யார் யோகா பயிற்சி மையத்தின் அக்கிரமங் களை கண்டித்து எத்தனை அமைப்புகள் நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் செய்தா லும், காவல் துறை கண்டுகொள்வதில்லை. மேலும், ஈஷா யோக மையத்திற்கு காவல் துறை உடந்தையாக இருப்பதை மாநில அரசு எப்படி வேடிக்கை பார்க்க கூடாது. ஏக்கர் கணக்கில் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் லட்சக்கணக்கான மக்களை திரட்டி கேளிக்கை நிகழ்ச்சிகள் அனுமதி யின்றி நடத்தப்படுகிறது. இவர்கள் மீது நடவ டிக்கை எடுப்பது காவல் துறைக்கும், மாநில அரசுக்கும் சவாலாக திகழும் விதமாக ஈஷா மையம் செயல்படுகிறது, என்றார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க கோவை மாவட்ட செயலாளர் சுதா பேசுகை யில், ஈஷா யோகா பயிற்சி மையத்திலிருந்து தன்னுடைய உடைகளை கூட மாற்றிக் கொள்ளாமல், அச்சத்தில் ஓடி வந்த பெண் பயத்தில் ஓடியது கண்காணிப்பு கேமரா காட் சியில் பதிவாகி உள்ளது. அச்சத்தில் அவ்வ ளவு அவசரமாக ஓடி தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு சுபஸ்ரீக்கு என்ன நேர்ந்தது? என்கிற கோணத்தில் காவல் துறை விசாரணை செய்ய வேண்டும், என் றார். முடிவில், இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் மாவட்ட பொருளாளர் தினேஷ் ராஜா நன்றி கூறினார்.
கட்டுப்பாட்டு அறை திறப்பு
உடுமலை, ஜன.2- உடுமலை பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் போக் குவரத்தை சீர் செய்யும் கட் டுப்பாட்டு அறையினை உடு மலை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் தேன்மொழிவேல் திறந்து வைத்தார். இதில், போக்குவ ரத்து ஆய்வாளர் வெங்கடே சன் உள்ளிட்ட காவல் துறை யினர் கலந்து கொண்டனர். மேலும், தலைக்கவசம் அணிந்து வாகனத்தை இயக் கியவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
காவலர்கள் வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை
கோவை, ஜன.2- கோவைப்புதூர் அருகே இரண்டு காவலர்கள் வீடுகளில் அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. கோவைப்புதூரைச் சேர்ந்தவர் ஜான் சேவியர் (46). இவர் போத்தனூர் காவல் நிலையத்தில் தலைமை காவல ராகவும், இவரது மனைவி எஸ்தரும் (41), காவலராக பணிபுரிந்து வருகின்ற னர். இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்த வர் கபிலன், சிறப்பு காவல் படையில் காவலராக உள்ளார். இந்நிலையில், டிச.31 ஆம் தேதியன்று இரவு ஜான் சேவியர் மற்றும் அவரது மனைவி எஸ் தர் ஆகியோர் வீட்டை பூட்டிவிட்டு புத் தாண்டு பிராத்தனைக்காக தேவாலயத் திற்கு சென்றனர். கபிலனும் வீட்டை பூட்டி வெளியே சென்றார். இதைய டுத்து தேவாலயத்திலிருந்து வீட்டிற்கு வந்த ஜான் சேவியர் – எஸ்தர் ஆகி யோர், வீட்டின் முன்பக்க கதவு உடைக் கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி யடைந்தனர். இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது, அறையிலி ருந்த பீரோவை உடைத்து, 38 பவுன் தங்க நகை மற்றும் ரூ.9 ஆயிரத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதனிடையே கபிலனும் வீடு திரும் பியபோது அவரது வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. அவரது வீட் டில் 27 பவுன் தங்க நகை, ரூ.75 ஆயி ரம் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து ஜான் சேவியர் மற்றும் கபிலன் குனிய முத்தூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள், 2 வீடுகளிலும் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து, விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்த 2 காவலர்களின் வீடுகளில் 66 பவுன் நகை மற்றும் ரூ.84 ஆயிரம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதி மக்களி டையே அதிர்ச்சியையும், அச்சத்தை யும் ஏற்படுத்தி உள்ளது.
பொறியாளர் மீது தாக்குதல்: 2 பேர் கைது
கோவை, ஜன.2- கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத் தின்போது பொறியாளரை தாக்கிய ஐடி ஊழியர் உட்பட 2 பேரை காவல் துறை யினர் கைது செய்தனர். கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் விக்ரம் (25). பொறியாளரான இவர் டிச.31 ஆம் தேதியன்று இரவு புத் தாண்டை கொண்டாட தனது சகோதரர் வருண் மற்றும் நண்பர் அதீஸ்வரன் ஆகியோ ருடன் காரில் ஆர்.எஸ்.புரம் சென்றார். அங்கு அவர்கள் காரை நிறுத்திவிட்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு குடிபோதையில் வந்த சிலர் விக்ரமி டம் தகராறு செய்தனர். இதில், ஏற்பட்ட வாக்கு வாதத்தில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கல்லால் அவரது கார் கண்ணாடியை உடைத் தனர். அந்த கும்பல் தகாத வார்த்தைகளால் திட்டி, விக்ரமை தாக்கினர். மேலும், தடுக்க முயன்ற வருண் மற்றும் அதீஸ்வரனையும் தாக்கி மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றனர். இதில் காயமடைந்த அவர்கள் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து விக்ரம் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், குடிபோதையில் தாக்குதல் நடத்தி யது ஆர்.எஸ்.புரம், சுக்கிரவார்பேட்டையை சேர்ந்த ஐடி ஊழியர் ஸ்ரீபிரமோத் (23) மற்றும் அவரது நண்பர் கோவில்மேடு, வஉசி நக ரைச் சேர்ந்த கவுதம் (35) என்பது தெரியவந் தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.