districts

img

பருத்தி தட்டுப்பாடு, விலை உயர்விற்கு எதிராக உரிய நடவடிக்கை

கோவை, மே 10- பருத்தி தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு குறித்து விரைவில் நட வடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில் உறுதியளித்தார். தி ஸ்டார்ட் அப்ஸ் அகாடமி சார்பில்  தொழில் முனைவோருக்கு ‘ஸ்டார்ட் அப் துருவ்’ விருது வழங்கும் விழா கோவையில் திங்களன்று நடைபெற் றது. இந்நிகழ்ச்சியில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்கி வெற்றி கரமாக நடத்தி வரும் 44 நிறுவனங் களுக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  விருதுகளை வழங்கினார்.  இதைத்தொடர்ந்து அவர் பேசுகை யில், கோவை மாநகரம் ஸ்டார்ட் அப் துறையில் முன்னோடியாக இருக்க  வேண்டும். தமிழ்நாட்டில் தொழில் முனைவோர்களுக்கு உகந்த மாவட் டமாக கோவையாக உள்ளது.  பெங்க ளூர், குருகிராம், ஹைதராபாத் போன்ற நகரங்கள் ஸ்டார்ட் அப் நக ரங்களாக உள்ளன. கோவையும் ஸ்டார்ட் அப் நகராக வளரும் என்ற நம்பிக்கை உள்ளது, என்றார். மேலும், பருத்தி தொழில் கோவை யிலும் சூரத்திலும் அதிகம் உள்ளது. ஆனால், சமீபகாலமாக பருத்தி தட்டுப் பாடு மற்றும் விலை உயர்வு தொடர் பான பிரச்சனையை கருத்தில் கொண்டு விரைவில் உரிய நடவ டிக்கை எடுக்கப்படும். தொழில் மூல மாக தான் நாடு முன்னேறும். அதற் கான பணியை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்றார்.