கோவை, செப்.17- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தின் கோவை மாவட்டக்குழு சார்பில் கோவையில் படப் பெட்டி துவக்கவிழா ஞாயிறன்று தாமஸ் கிளப்பில் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, தமுஎகச மாவட்டச்செயலாளர் அ.கரீம் தலைமை ஏற்றார். ஸ்ரீநிதா வரவேற்றார். இதில், கோவை மாநகரில் திரைப்பட துறையில் ஆர்வமுள்ள இளை ஞர்கள் அதற்கான முயற்சிகளாக குறும்படம் எடுப்பது திரை யிடுவது போன்ற முயற்சி செய்து வருகின்றனர். ஆனாலும் பெரிய அளவில் சாதிக்க சரியான வழிகாட்டல் இல்லாத நிலை உள்ளது. அது போன்று திரைப்படதுறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு திரைப்படங்கள் சார்ந்த தொழில் நுட்பம் கற்றுகொடுத்து அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அவர்களை தயார் படுத்தவும், வழிகாட்டிடவும் படப்பெட்டி அமைப்பு உதவும். இந்நிகழ்வில் சதீஷ் ஆனந்தன், டாக்டர் ஜே.ஜான் ஆண்டனி ராஜா, பைஜுபால் ஆகியோர் வாழ்த்துரை யாற்றினர். தமுஎகச திரை இயக்கம்-ஒருங்கிணைப்பளர் அய்.தமிழ்மணி, எழுத்தாளர் பாமரன், திரைக்கலைஞர் செல்லா ஆகியோர் சிறப்புரையாற்றினர். அப்ரா நன்றி கூறி னார். இதில், திரளான படைப்பாளிகள் கலந்து கொண் டனர்.