districts

img

உலாந்தி வனச்சரகத்தில் பெண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி, மார்ச் 18- உலாந்தி வனச்சரகத்தில் பெண் யானை உடலில் காயங் களுடன் உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், உலாந்தி வனச்சரகத்திற்குட்பட்ட வரகளியார் பிரிவு, சின்னார் பகுதியில்  வனத்துறை யினர் ரோந்து  பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது, உடல் மெலிந்து பெண் யானை ஒன்று படுத்திருந்தது. அந்த யானை யின் அருகே வனத்துறையினர் சென்றபோது, அவர்களை அருகே நெருங்க விடாமல் ஆவேசமாக துரத்தியுள் ளது. இதனைத்தொடர்ந்து அந்த யானையை வனத்து றையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலை யில், வியாழனன்று மாலை 5.15 மணிக்கு உடல் மெலிந்து உடம்பில் காயத்துடன் இருந்த அந்த 20 வயது மதிக்கத் தக்க பெண் யானை உயிரிழந்தது. இதனையடுத்து உயி ரிழந்த யானையை அருகில் சென்று வனத்துறையினர் பரிசோதித்தனர். இதில், தந்தங்களால் குத்தப்பட்ட காயம் இருந்துள்ளது. இனப்பெருக்கத்திற்காக ஆண் யானை யுடன் ஏற்பட்ட மோதலின்போது காயம் ஏற்பட்டிருக்கலாம், என கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்ரமணியம் மற்றும் துணை இயக்கு னர் கணேசன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களின் வழிகாட்டுதலின்படி வனக்கால்நடை மருத்து வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடற்கூறாய்விற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.