districts

img

வெறிநாய் கடித்து ஒரே நாளில் 10 ஆடுகள் பலி: கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

தாராபுரம், பிப்.10- தாராபுரம் அருகே வெறி நாய் கடித்து குதறியதில் ஒரே நாளில் கூடா ரத்தில் இருந்த  10  ஆடுகள் பலியான தால், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள்  வெறி நாய்களை பிடிக்க நடவடிக்கை  எடுக்க கோரி தாராபுரம் கோட்டாட்சியர்  அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தாராபுரத்தை அடுத்துள்ள மனக்க டவு ஊராட்சிக்கு உட்பட்ட தேர்பட்டி கிரா மத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களது பிரதான தொழில் கால் நடை வளர்ப்பு. அந்த வகையில் மனக்க டவு கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட  குடும்பத்தினர் தங்களது வாழ்வாதா ரத்தை நடத்துவதற்காக கோழி மற்றும்  செம்மறி ஆடுகளை வளர்த்து, அதனை  குண்டடம் மற்றும் கன்னிவாடி வாரச் சந்தைகளில் விற்பனை செய்து வரு கின்றனர். இந்த நிலையில் கடந்த  மூன்று மாத காலமாக விவசாயிகள் தங்கள் பட்டியில் அடைத்து வைத்தி ருக்கும் ஆடுகளை அப்பகுதியில் சுற்றி  திரியும் வெறி நாய்கள் கடித்ததாக தெரிகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் மனக்க டவு கிராமத்தில் உள்ள காடுகளில் மேய்ந்து கொண்டிருந்த 200 க்கும் மேற் பட்ட செம்மறி ஆடுகளை வெறி நாய் கள் கூட்டமாக கடித்துள்ளது.இது குறித்து அதிகாரிகளின் கவனத்திற் குக் கொண்டு சென்றும் எந்த நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை. இதைய டுத்து, நாய்களைப் பிடிக்க அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாகக் கூறி மனக் கடவு கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற் பட்ட விவசாயிகள் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு முற் றுகையிட்டு, கோட்டாட்சியர் குமரேசனி டம் மனு கொடுத்தனர்.  மனுவை பெற்றுக்கொண்ட கோட் டாட்சியர், வெறி நாய்களை பிடிப்ப தற்கு உரிய அதிகாரிகளுக்கு தெரியப் படுத்தப்படும்.மேலும் நாய்களைப் பிடித்து காப்பகங்களில் விடுவதற்கு நட வடிக்கை எடுப்பதாகவும். நாய்கள் இனப்பெருக்கத்தைக் குறைக்க ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் நாய்க ளுக்குக் கருத்தரிப்பு அறுவை சிகிச்சை  செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் படும். கிராமத்தின் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தவும் நடவ டிக்கை எடுக்கப்படும் என விவசாயிக ளிடம் உறுதி அளித்தார். அதனை  தொடர்ந்து விவசாயிகள் கோட்டாட்சி யர் அலுவலகத்தில் இருந்து கலைந்து  சென்றனர்.