districts

பழங்குடி பெண்களின் போராட்டமே வெற்றிக்கு காரணம்

கோவை, நவ.5- பழங்குடி பெண்களின் உறுதி யான போராட்டம் வெற்றிக்கு கார ணம் என வாச்சாத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து விவசாயிகள் சங்க அகில இந்திய துணைத்தலைவர் ஹன்னன் முல்லா தெரிவித்துள் ளார். கடந்த 1992 ஆம் ஆண்டு வனத் துறை, வருவாய்த்துறை, காவல் துறையினர் தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி கிராமத்தில் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பழங்குடியின பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, வீடுகளை சூறையாடியது கொடூ ரத்தின் உச்சக்கட்டமாகும். இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதர வாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும் களமாடியாது. இதன் தொடர்ச்சியாக 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பாதிக்கப்பட்ட மக் களுக்கு நீதி கிடைத்து, குற்றவாளி களுக்கு தண்டனையை உயர்நீதி மன்றம் உறுதிசெய்துள்ளது. தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்  நடத்திய சட்ட போராட்டத்தின் வெற் றியை கொண்டாடும் வகையில் கோவை மாவட்டம், ஆனைமலை அடுத்த வேட்டைக்காரன் புதூரில் மோடிமேடு பகுதியில் பொதுக்கூட் டம் நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் ஆனை மலை தாலுகா செயலாளர் வி.எஸ். பரமசிவம் தலைமை வகித்தார். பி.பி.மகேந்திரன், வி.எஸ்.பால சுப்பிரமணியம் ஆகியோர் முன் னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கட்சியின் மத் தியக்குழு உறுப்பினர் பெ.சண் முகம் பேசுகையில், உலகிலேயே அரசு பதவியில் இருந்தவர்கள் ஒரே  நேரத்தில் தண்டிக்கப்பட்ட வர லாற்று தீர்ப்பினை பழங்குடி மக்க ளுக்கு கிடைக்க தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் மற்றும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதி யான போராட்டத்தின் மூலம் சாத் தியமானது. பாதிக்கப்பட்ட பகு திக்கு மலைவாழ் மக்கள் சங்கமோ,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ சென்றிருக்கவில்லை என்றால்  வாச்சாத்தி மக்கள் திருட்டு வழக் கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருபார்கள், என்றார். இதைத்தொடர்ந்து விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் ஹன்னன் முல்லா சிறப் புரையாற்றுகையில், வாச்சாத்தி பழங்குடியின பெண்களின் உறுதி யான போராட்டமே வழக்கின் வெற் றிக்கு காரணம். வாச்சாத்தி வழக் கின் இந்த வெற்றியை கொண்டாட  வேண்டும். இந்தியா முழுவதும் அனைத்து பகுதி மக்களிடமும் வெற் றியை கொண்டு செல்ல வேண்டும்,  என்றார். இக்கூட்டத்தில் மலைவாழ் மக் கள் சங்க மாநில பொதுச்செயலா ளர் ஆர்.சரவணன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஆர். பழனிச்சாமி, விவசாய தொழிலா ளர் சங்க மாவட்டத் தலைவர் ஏ. துரைசாமி, சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எம்.கனகராஜ், அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் எம்.பரம சிவம் உட்பட திரளானோர் கலந்து  கொண்டனர். முடிவில், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டக்குழு உறுப் பினர் கே.பத்மினி நன்றி கூறினார்.