கோவை, ஜூலை 28– நீர் வழிப்பாதையை அழித்து கொடிசியா நிர்வாகம் தொழிற் பேட்டை அமைத்துள்ளதாக குற்றம் சாட்டி தமிழக விவசாயிகள் பாது காப்பு சங்கத்தினர் கொடிசியா அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட் டத்டதில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், சூலூர் கள் ளப்பாளையம் கிராமத்தில் கொடி சியா நிர்வாகம் சார்பில் 140 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய தொழிற் பூங்கா கட்டப்பட்டு வருகிறது. அங் குள்ள நீர் நிலையை ஆக்கிரமித்தும், அந்த நீர் நிலைக்கு வரக்கூடிய நீர் வழித்தடத்தை அழித்தும், இந்த தொழிற்பூங்கா கட்டப்பட்டு வருகி றதாக தமிழக விவசாயிகள் பாது காப்பு சங்கத்தினர் குற்றம்சாட்டியுள் ளனர். மேலும் தொழிற் பூங்கா நிறுவுவ தற்காக நகர ஊரமைப்பு துறை இயக் குநரிடம் உண்மை தகவல்களை மறைத்தும்,பொய்யான தகவல் களை வழங்கியும் டிடிசிபி அனுமதி பெற்றுள்ளாதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் கோவை - அவி நாசி சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே கொடிசியா தொழிற் பூங்கா அலுவலம் முன்பு தமிழக விவ சாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் முற் றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாவட்ட நிர்வா கத்தில் இருந்து அதிகாரிகள், காவல் துறை மற்றும் கொடிசியா நிர்வாகி களோடு விவசாயிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து குறித்த மனுவை அதிகா ரிகளிடம் விவசாய சங்கத்தினர் கொடுத்தனர். இதனை பெற்றுக் கொண்ட அதிகாரிகள், விதிமீறல்கள் இருக்கும்பட்சத்தில் கட்டாயம் நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதிய ளித்தனர். இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சிவக்குமார் கூறு கையில், நீர் நிலைக்குப் போகக்கூ டிய நீர்வழிப் பாதையை அழித்து கொடிசியா நிர்வாகம் டிடிசிபி அனு மதி வாங்கியுள்ளது. இந்த செயல் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான செயல். நீர் நிலையை அழிக்கக்கூ டாது நீர் நிலையை காப்பாற்ற வேண் டும் என பல தீர்ப்புகள் உள்ளது. ஆனால் நீர் நிலையை அழிக்கும் நிர் வாகங்களுக்கு ஆதரவாக வரு வாய்த் துறையும், உள்ளாட்சி நிர்வா கமும் செயல்படுவதாக குற்றம்சாட்டி னார்.