கோவை, ஏப்.5- விளை நிலங்களை சேதப்படுத்திய காட்டு யானைகளை காட்டுக்குள் விரட்டிய விவசாயிகள் மீது, வழக்கு பதிவு செய்துவிடுவதாக மிரட்டிய வனத்துறை அதிகாரி மீது நட வடிக்கை எடுக்க கோரி விவசாய பொதுமக்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், தீத்திபாளையம் அடுத்த கரடிமடை பகுதியில், குட்டியுடன் 5க்கும் மேற்பட்ட யானைக் கூட்டம், கடந்த 5 நாட்களாக இரவு நேரங்களில் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வந்தது. இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினரிடம் தகவல் அளித்துள்ள னர். ஆனால், வனத்துறை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் கோபமடைந்த அப்பகுதி விவசாயிகள் டிராக்டர் உதவியுடன், யானைகளை காட்டுக்குள் விரட்டினர். இந்த நிலையில், யானைகளை விரட்டிய குற்றத்திற்காக, அப்பகுதி விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்துவிடுவேன் என மதுக்கரை வனத்துறையைச் சார்ந்த லிங்கஐய்யப்பன் மிரட்டியதாக கூறி, மாதம்பட்டி நால்ரோடு பகுதியில் விவசாயி கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இரவு நேரங்களில் விளைநிலங்களுக்குள் புகும் காட்டுயா னைகளை விரட்ட வனத்துறை சார்பில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதேநேரத்தில் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சி யின் காரணமாக உணவு, குடிநீர் தேடி ஊருக்குள் வரும் வனவிலங்களை விரட்ட வனத்துறையின் உதவியை நாடா மல், பொக்லைன் போன்ற இயந்திரங்களைக்கொண்டு வனவிலங்குகளுக்கு அச்சம் ஏற்படும் வகையில் நடப்பது ஏற்புடையதல்ல, யானை ஆவேசம் கொண்டு திருப்பி தாக்க ஆரம்பித்தால், உயிர்ப்பலி ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே வனத்துறையினரின் உதவியை நாடுவதே நல்லது என சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.