இளம்பிள்ளை, ஜன.19- மகுடஞ்சாவடியில் விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா புதனன்று தொடங்கியது. சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வேளாண்மை, தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ், மகுடஞ்சாவடி வட்டா ரத்தில் உள்ள 40 விவசாயிகள் புதனன்று மூன்று நாள் மாநில அளவிலான விவசாய சுற்றுலா பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இச்சுற்றுலாவை மகுடஞ்சாவடி வேளாண்மை உதவி இயக்குனர் தமிழ்செல்வன் தொடங்கி வைத்தார். அப்போது மீண்டும் மஞ்சப்பை என்ற திட் டத்தை, விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யில், விவசாயிகளுக்கு, துண்டு குறிப்பேடு, பேனா, முகக் கவசம், அடங்கிய மஞ்சப்பை தொகுப்பினை வழங்கி னார். இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவ லர்கள் சிவகுமார், கண்ணன், செல்வி ஆகியோர் செய்தி ருந்தனர்.