தாராபுரம், ஜூன் 24 - தாராபுரம் உழவர் சந்தை அருகே நக ராட்சி காய்கறி வியாபாரிகள் தரைவழி கடை போட்டு வியாபாரம் செய்வதால் உழ வர் சந்தை வியாபாரம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் காய்கறிகளை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இத னால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. தாராபுரம் அண்ணாநகர் உழவர்சந்தை யில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்க றிகளை தினசரி கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். கொரோனா தொற்றின் போது நகராட்சி மேல்நிலைப் பள்ளி மைதா னத்தில் உழவர்சந்தை காய்கறி விவசாயி களும், தினசரி மார்க்கெட் வியாபாரிகளும் இணைந்து ஒரே இடத்தில் காய்கறி விற் பனை மேற்கொண்டனர். இந்நிலையில் கொரோனோ தொற்று முடிந்த பிறகு நகராட்சி மேல்நிலைப் பள்ளி மைதானத் திற்கு வெளியே உள்ள பகுதியில் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் தரை வழி கடையை போட்டு விற்பனை செய்தனர். இதனால் உழவர்சந்தை விவசாயிகளுக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டது.
எனவே இந்த தரைவழி கடைகளை பழையபடி தினசரி காய்கறி மார்க்கெட் பகு திக்கு மாற்றக் கோரி மூன்று முறை விவ சாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டும், உழ வர் சந்தை விவசாயிகள் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் உழவர் சந்தை விவசா யிகள் அதிகாலையிலேயே பொள்ளாச்சி மெயின் ரோடு நகராட்சி பள்ளி வாயில் முன்பு திடீரென காய்கறிகளை சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். தகவலறிந்து தாராபுரம் போலீசார் சம் பவ இடத்திற்கு வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் நக ராட்சி அதிகாரிகள் உறுதியளித்தால் மட் டுமே போராட்டத்தை விலக்கிக் கொள் வோம் என விவசாயிகள் உறுதியாக கூறி னர். இதையடுத்து காவல் ஆய்வாளர் மணி கண்டன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் கள் அடங்கிய குழு விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. வெள்ளியன்று முதல் உழவர் சந்தை அருகே நகராட்சி காய் கறி வியாபாரிகள் தரைவழி கடை போட அனுமதிக்க மாட்டோம், தினசரி மார்க்கெட் டில் காய்கறிகளை விற்பனை செய்து கொள்ள அவர்களை அறிவுறுத்தி உள்ள தாக உறுதி கூறினர். இதையடுத்து காலை எட்டரை மணியளவில் சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.