districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஒப்பந்த கூலி உயர்வு வழங்காத நிறுவனம் பவர் டேபிள் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

திருப்பூர், பிப்.12- ஒப்பந்தப்படி 7 சதவீத கூலி உயர்வு வழங் காத அமுல் நிறுவனத்தை கண்டித்து பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்கத்தினர் புதன்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். சைமா ஒப்பந்தப்படி ஆண்டுக்கு ஒரு முறை கூலி உயர்வு வழங்க வேண்டும். கடந்த  ஆண்டு வேலை நிறுத்த போராட்டம் செய் ததை அடுத்து, 2024 ஜூன் மாதம் வழங்க வேண் டிய 7 சதவீத கூலி உயர்வை ஆகஸ்ட் மாதம்  தருவதாக ஜேஜி  (அமுல் நிறுவனம்) ஒப்புக் கொண்டது. ஆனால் 7 மாதங்கள் கடந்த நிலை யில், இன்னும் ஒப்புகொண்ட கூலி உயர்வை  தராமல் உள்ளனர். இந்நிறுவனத்திற்கு கிழ் 300 செக்ஷன்கள், 6 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். தற்போது நூல் விலை உயர்வு, ஜிஎஸ்டி, பெட்ரோல் டீசல் விலை உயர் வால் இந்தத் தொழில் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் ஒப்புகொண்ட கூலி உயர்வை அமுல் நிறுவனம் வழங்கா மல் உள்ளனர். வரும் ஜூன் மாதம் இந்த  ஆண்டிற்கான 7 சதவீத கூலி உயர்வு வழங்க வேண்டும். எனவே ஒப்புகொண்ட கூலி உயர்வு தரும் வரை அந்த நிறுவனத்திற்கு டெலிவரி கொடுப்பது இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக திருப்பூர் பவர்டேபிள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நந்தகோபால், செயலாளர் கே. எஸ்.முருகேசன் ஆகியோர் தெரிவித்தனர்.

விவசாயிகளின் நில உடமைகள் சரிபார்க்கும் முகாம்

திருப்பூர், பிப்.12- பல்லடம் வட்டத்தில் விவசாயிகளின் நில  உடமைகள் சரிபார்க்கும் முகாம் பிப்.15 ஆம்  தேதி வரை நடைபெறவுள்ளது என தெரிவிக் கப்பட்டுள்ளது.  இதுகுறித்து வேளாண்மைத் துறை  சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்  கூறியிருப்பதாவது, பல்லடம் வட்டத்துக்குட் பட்ட விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கும் பணி வேளாண்மைத் துறை சார்பில் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதி யாக விவசாயிகளின் நில உடமைகளை சரி பார்த்து பதிவு செய்யும் முகாம் அனைத்து வருவாய் கிராமங்களிலும் பிப்.10 ஆம் தேதி  தொடங்கியது. இந்த முகாம் பிப்ரவரி 15 ஆம்  தேதி வரை நடைபெறுகிறது. ஊராட்சி அலு வலகம் அல்லது கிராம நிர்வாக அலுவல கங்களில் நடைபெறும் முகாமில் விவசாயி கள் சிட்டா, ஆதார், ஆதாருடன் இணைக்கப் பட்ட கைப்பேசி எண் ஆகியவற்றுடன்  பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது.திருப்பூர், பிப்.12- பல்லடம் வட்டத்தில் விவசாயிகளின் நில  உடமைகள் சரிபார்க்கும் முகாம் பிப்.15 ஆம்  தேதி வரை நடைபெறவுள்ளது என தெரிவிக் கப்பட்டுள்ளது.  இதுகுறித்து வேளாண்மைத் துறை  சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்  கூறியிருப்பதாவது, பல்லடம் வட்டத்துக்குட் பட்ட விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கும் பணி வேளாண்மைத் துறை சார்பில் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதி யாக விவசாயிகளின் நில உடமைகளை சரி பார்த்து பதிவு செய்யும் முகாம் அனைத்து வருவாய் கிராமங்களிலும் பிப்.10 ஆம் தேதி  தொடங்கியது. இந்த முகாம் பிப்ரவரி 15 ஆம்  தேதி வரை நடைபெறுகிறது. ஊராட்சி அலு வலகம் அல்லது கிராம நிர்வாக அலுவல கங்களில் நடைபெறும் முகாமில் விவசாயி கள் சிட்டா, ஆதார், ஆதாருடன் இணைக்கப் பட்ட கைப்பேசி எண் ஆகியவற்றுடன்  பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது.