districts

சூறாவளிக்கு 2 ஏக்கர் வாழை மரங்கள் சேதம் இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

கோவை, மே 16- தொண்டாமுத்தூர் பகுதியில் வீசிய சூறாவளி காற்றால் 2 ஏக்கர் வாழை மரங்கள் சேதடைந்துள்ளதால், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவ சாயிகள் வலியுறுத்தி உள்ளனர். கோவை மாவட்டம், தொண்டாமுத் தூர் பகுதியானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. தண் ணீர் செழிப்பான இப்பகுதியில் விவசா யிகள் வாழை, மஞ்சள், நெல், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது மத்தவ ராயபுரம், செம்மேடு, இருட்டுபள்ளம், சாடிவயல், நரசிபுரம் உள்ளிட்ட பகுதி களில் வாழை அதிகம் சாகுபடி செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில், கோவை யில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. அப்போது பலத்த சூறாவளி காற்று வீசயதால் ஏரா ளமான வாழை மரங்கள் சாய்ந்தன. இதனிடையே திங்களன்று தீவிர சூறா வளி காற்று வீசியதால் வாழை மரங் கள் மற்றும் தென்னை மரங்களும் சாய்ந்து, சேதமடைந்தன. எனவே, சேத மடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயி ஒருவர் கூறுகையில், இருட்டுபள்ளம் அருகே எனக்கு இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் வாழை பயி ரிட்டிருந்தேன். ஒரு வாழை மரத்திற்கு 700 முதல் 800 ரூபாய் வரை முதலீடு செய்துள்ளேன். அறுவடை நேரம் நெருங்கி வரும் நிலையில், சூறாவளி  காற்று வீசியதால் மரங்கள் அனைத்தும் சேதமடைந்தன. எனவே, தமிழ்நாடு அரசு எங்களுக்கு நிவாரண நிதி தர வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.