கோவை, அக்.3- உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கக் கோரி பொள் ளாச்சி பொதுப்பணித் துறை அலுவலகத்தில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உப்பாறு அணை உள்ளது. திருமூர்த்தி அணையின் உபரி நீரை சேமிக்கும் வகையில் இந்த அணை கட்டப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்னர் உபரி நீரால் பயன்பெற்று வந்த உப்பாறு அணைக்கு பி.ஏ.பி திட்டப் பாசன விரிவாக்கம் நடந்த பிறகு உபரி நீரின் அளவு குறைந்தது. அதோடு அணைக்கு மழைநீர் வரும் ஓடையில் பல இடங்களில் ஊராட்சி நிர்வாகங்களால் தடுப் பணைகள் கட்டியதால் அணைக்கு வரக்கூடிய மழைநீ ரும் வராமல் போய்விட்டது. அணையின் நீராதாரங்கள் அழிக் கப்பட்டதால் உப்பாறு அணையால் பயனடைந்த 6 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டு வரு கின்றன. இந்நிலையில், உப்பாறு அணையை நம்பியுள்ள விவ சாயிகள் திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி பாசனத் திட்டத்தில் உபரி நீரை திறந்துவிடக்கோரி கோவை மாவட்டம், பொள்ளாச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் காத் திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.