ஈரோடு, ஜூன் 25– மஞ்சளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்து குவிண்டால் ரூ. 11,000க்கு கொள்முதல் செய்ய வேண் டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத் தில் விவசாயிகள் வலியுறுத்தினர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா தலைமையில் நடைபெற்ற மாதந்திர வேளாண் குறைதீர் கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. இதில், விவசாயிக ளிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பெற்றுக் கொணடார். இக்கூட்டத்தில் விவசாய சங்கப் பிர திநிதிகள் மற்றும் விவசாயிகள் பல் வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர். இதில், கீழ்பவானி அணையில், காவிரி தீர்ப்புக்கு புறம்பான நீர் நிர்வாகத்தை நீர்வளத்துறை தொடர்ந்து கடைப்பி டித்து வருகிறது. இது திட்டமிட்டே நீதி மன்ற உத்தரவை மீறும் செயலாகும். இதனால் 16 போக கடலை சாகுபடி யில், 8 போக நெல் சாகுபடியை இழந் துள்ளோம். எனவே, நீதிமன்ற உத்தர வின்படி நீர் நிர்வாகத்தை அமல் படுத்த வேண்டும். மேலும், வழக்கம் போல மேட்டூர் வலதுகரைப் பாசனத் துக்கு ஆகஸ்ட் 1ம் தேதி தண்ணீர் திறக்கவேண்டும். அதற்கும் முன் பாக வாய்க்காலில் உள்ள மதகுகள், கிளை வாய்க்கால்களை மராமத்து செய்ய வேண்டும். சொட்டு நீர் பாசனத்துக்கான மானி யத் தொகையை உடனடியாக விவசா யிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக விற்ப னைக்கு வந்துள்ளதாக கூறப்படும் திரவ உரங்களின் தரம் குறித்து அதிகா ரிகள் ஆய்வு செய்து உரிய விளக்கம ளிக்க வேண்டும். நீர் நிலை ஆக்கிரமிப்புகள் சம்பந் தமாக ஆய்வு மேற்கொள்ள அரசு அமைத்த குழு இதுவரை ஈரோடு மாவட்டத்தில் குழு அமைக்கப்பட வில்லை. வேளாண் பொறியியல் துறையில் இயந்திரங்களைப் பெறு வதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க வேண்டும். மலைப்பகுதி மக்களுக் கும், மலை அடிவாரத்தில் வசிக்கும் மக் களுக்கும் வனத்துறை சார்பில் குறை தீர் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உரங்கள் மீது விதிக்கப்படும் 5 சத வீத வரியையும், பூச்சி கொல்லி மருந்து களின் மீது வதிக்கப்படும் 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியையும் நீக்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரமும், நெல் ஒரு கிலோ ரூ.30க்கும் கொள்முதல் செய்ய வேண் டும். மஞ்சளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்து குவிண்டால் ரூ. 11,000க்கு கொள்முதல் செய்ய வேண் டும். பால் கொள்முதல் விலையை லிட் டருக்கு ரூ.20 உயத்த வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாகப் பால்கொள்முதல் விலை உயர்த்தப்படாமல் உள்ளது. கூட்டுறவுத் துறை சார்பில் பால் கொள் முதல் செய்யும்போது பாலின் தரம் கணக்கிடப்பட்டு விலை நிர்ணயிக்கப் படுகிறது. அதன்பின், பால் குளிரூட் டும் நிலையத்தில் தரம் குறைவாக இருப்பதாக கூறி லிட்டருக்கு ரூ. 3 வரை விலையை குறைத்து விடுகின்ற னர். கீழ்பவானி வாய்க்காலைத் தூர் வார நடிவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உயர்மின் அழுத்த திட்டம் பயன்பாட்டுக்கும் வந்தும், இன் னும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை. அவர் களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். வெங்காயம், தக்காளி போன்றவற் றின் விலை வீழ்ச்சியைத் தடுக்க ஆங் காங்கே குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டைத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரி வித்த கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் துறை அலுவலர்கள் விளக்கம் அளித் தனர். இக்கூட்டத்தில், விவசாய சங்கங் களின் பிரதிநிதிகள் நல்லசாமி, மோகன், சுபி.தளபதி, வி.பி.குணசேக ரன், சுதந்திர ராசு, முனுசாமி, துளசி மணி, ராமசாமி மற்றும் வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் முருகேசன், செயற்பொறியா ளர் விஸ்வநாதன், தோட்டக்கலைத் துணை இயக்குநர்கள் தமிழ்செல்வி, சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.