districts

பொள்ளாச்சி: தக்காளி விலை வீழ்ச்சி

 பொள்ளாச்சி: தக்காளி விலை வீழ்ச்சி  பொள்ளாச்சி, பிப்.27-  பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி விலை வரலாறு காணாத அளவிற்கு கடும் வீழ்ச்சி அடைந்துள்ள தால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தக்காளி வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் முன்னெப் போதும் இல்லாத வகையில் தக்காளி விலை வீழ்ச்சிய டைந்துள்ளது. பொள்ளாச்சி காந்தி தினசரி மார்க்கெட்டில் நாட்டு தக்காளி கிலோ ரூ.5க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட் டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ.5க்கு விற்பனையாகிறது. இது ஒரு தேநீர் குடிக்கும் செலவைக்கூட சரிகட்ட முடியாது. கடந்த ஒரு மாதமாக கிலோ ரூ.15க்கு விற்பனையானது. அதுவே மிகப்பெரிய பேரிடியாக இருந்தது. தற்போதைய நிலைமை இன்னும் எங்களை போன்ற தக்காளி பயிரிட்ட விவசாயி களை கவலையில் ஆழ்த்திவிட்டது. எனவே, தமிழக அரசு தலையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தமிழ்நாடு வேளாண்மை துறை மற்றும் தோட்டக் கலைத்துறை  மானிய அடிப்படையில் உடனடியாக  மாற்று  பயிரிட புதிய திட்டங்கள் உருவாக்கி, அதனை தற்போது பாதிப்படைந்த தக்காளி பயிரிட்ட விவசாயிகளை சென்று  சேர வழிவகை செய்ய வேண்டும், என்றனர்.