districts

img

பெண்களை மிரட்டி பணம் பறிப்பு

கோவை, அக்.11- பெண்களின் சுய விருப்ப  புகைப்படங்களை இணைதளத் தில் வெளியிடுவதாக கூறி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.  YoYo என்ற இணைய தள ஆப் மூலமாக தன்னிடம் பழகி, அந்தரங்க புகைப்படங் கள் மற்றும் வீடியோக்களை பெற்று பணம் பறித்ததாக கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பெண்  ஒருவர் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வந்தனர். இந்நிலையில் விருதுநகரை அடுத்த கூமாப் பட்டியை சேர்ந்த பரமசிவம் என்பவர் போலியாக ப்ரொ பைலை உருவாக்கி பெண்களிடம் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை யில் பரமசிவம் யோ- யோ என்ற (YoYo) ஆன்லைன் இணைய தள ஆப் மூலம் பல பெண்களிடம் நண்பராக பழகி, அழ கிய ஆண்களுடைய புகைப்படத்தை தன்னுடைய புகைப்பட மாக (ப்ரொபைல் போட்டோவாக) வைத்து பல பெண்களை நம்ப வைத்துள்ளார். இதனை நம்பிய பெண்கள், தங்களது சுயவிருப்ப புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி உள்ளனர். இதையடுத்து, ஆன்லைனில்  பரப்பி விடுவேன் என்று கூறி பெண்களை மிரட்டி அவர்களிடமிருந்து பணத்தை பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.  சமூக ஊடகங்களிலும், முன் பின் தெரியாத நபரிடமும் பழக்கமாகி, அவர்களது ஆசை வார்த்தைகளை நம்பி இது போன்ற பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளக்கூடாது என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.