districts

img

கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்க வலியுறுத்தல்

திருப்பூர், பிப்.27- மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப் பிக்க ஒருமாத கால நீட்டிப்பு கோரி இந்திய மாணவர் சங்கம்  சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திங்களன்று  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  எஸ்சி/எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை  விண்ணப்பிக்கும் தேதியினை ஒருமாத காலம் நீட்டிக்க கோரி யும், கல்வி நிலையங்களிலேயே எளிய முறையில் விண்ணப் பிக்கும் வகையில் ஏற்பாடு செய்திட கோரியும் தமிழ்நாடு முழு வதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திட மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில்  அறைகூவல் விடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் திங்க ளன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாநில குழு  உறுப்பினர் ஷாலினி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில் மாவட்ட தலைவர் பிரவீன் குமார், மாவட்ட செய லாளர்  தெள.சம்சீர் அகமது ஆகியோர் உரையாற்றினர். இதைதொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு  கொடுக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட் சியர் கால அவகாசம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்றார்.  இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் கல்கி ராஜ், மணிகண் டன், சுதா,மோகன பிரியா , சபரி உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.