districts

img

சிபிஎம் பிரச்சார இயக்கம்

கோவை, நவ.13- ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை அம்ப லப்படுத்தி தமிழகம் முழுவதம் மார்க்சிஸ்ட் கட்சியினர் பிரச் சார இயக்கத்தில் ஈடுபட்டனர். விலைவாசி உயர்வு, வேலையின்மை, சிறு,குறு தொழில்  பாதிப்பு, பெண்கள் குழந்தைகளுக்கு மீதான பாலியல் வன் முறை, நுண் நிதி நிறுவனங்களின் அடாவடித்தனங்கள், ஒன் றிய அரசின் சேவைத் துறைகளை தனியார் மயமாக்கல் ஆகிய வற்றை அம்பலப்படுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சார்பில் மாநிலம் முழுவதும், ஒன்றிய அரசுக்கு எதிராக பிரச் சார இயக்கங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில், கிழக்கு  கமிட்டி சார்பில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன், மாவட்டக் குழு உறுப்பினர்கள்  என்.ஜாகீர், டி.  சுதா, கிழக்கு நகரக் குழு செயலாளர் செல்வராஜ் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். மேற்கு, எஸ்.எஸ்.குளம் கிழக்கில்  நடைபெற்ற இயக்கத்தில், இடைக்குழு செயலாளர் ஆர். கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கனக ராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் உஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதை போன்று, மேற்கு நகரக் குழு சார் பில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.தெய்வேந்தி ரன், மாவட்டக் குழு உறுப்பினர் சுதா, மேற்கு நகரக் குழு செய லாளர் பி.சி.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். தருமபுரி தருமபுரி, வெண்ணாம்பட்டியில் புதனன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்திற்கு சிபிஎம் ஒன்றியச் செய லாளர் கே.கோவிந்தசாமி தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து, மாவட்டக் குழு உறுப்பினர்கள் என்.கந்தசாமி, கே.பூபதி, எம்.அருள் குமார், மூத்த தோழர் பி.பழனி, ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தருமபுரி ஒன்றி யம் முழுவதும் உள்ள கிராமங்களில் இந்த மக்கள் சந்திப்பு  பிரச்சாரம் நடைபெற்றது.  சேலம் இதேபோன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம்  வடக்கு மாநகரக்குழு சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்க  நிறைவு பொதுக்கூட்டம், பள்ளப்பட்டியில் செவ்வாயன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆர்.ஆறுமுகம் தலைமை வகித்தார். இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர்  மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். வெங்கடபதி, வடக்கு மாநகரச் செயலாளர் என்.பிரவீன் குமார், மாநகரக்குழு உறுப்பினர்கள் உட்பட திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்.