பணம் கையாடல்: காசாளர் கைது
கோவை, மார்ச் 5- கோவை மாவட்டம், பீளமேடு அருகே உள்ள தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் அதே பகுதியிலுள்ள மாதம்பட்டி தங்கவேலு என்ற புட் பேக் டரியை பீளமேட்டில் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத் தில் காசாளராகப் பணியாற்றி வரும், சுரேந்தர் (31) என்ப வர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நிறுவனத்தின் கணக் குக்கு செலுத்த வேண்டிய ரூ.6 லட்சத்து 5 ஆயிரத்தை தனது வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். இந்நிலையில், அலுவலக கணக்கு வழக்குகளை பார்த்த கிருஷ்ணகுமார், சுரேந்தர் பணத்தை அவரது கணக்கில், செலுத்தியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீ சார், சுரேந்தரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
தனியார் பேருந்து மோதியதில் பெண் படுகாயம்
கோவை, மார்ச் 5- கோவை, கோவில்பாளையத்தைச் சேர்ந்தவர் ஷைல க்ஷனா (28). இவர் காந்திபுரம் அருகே உள்ள நஞ்சப்பா சாலை யில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவ் வழியாக வந்த தனியார் பேருந்து, சைலக்ஷனாவின் மீது மோதி யது. இதில், அவரது இடது தோள்பட்டை உள்ளிட்ட இடங் களில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீ சார், அதீத வேகத்தில் பேருந்தை இயக்கியதாக குளத்து பாளையத்தை சேர்ந்த மனோஜ் (33) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
வணிக நிறுவனங்களில் அதிகாரிகள் ஆய்வு
உதகை, மார்ச் 5- நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்களில் தொழிலா ளர் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு வணிக நிறு வனங்களில் ஒவ்வொரு மாத மும் தொழிலாளர் துறையி னர், பல்வேறு சட்டங்க ளின் கீழ் ஆய்வுகள் மேற் கொண்டு வருகின்றனர். இதன் படி கடந்த பிப்ரவரி மாதத் தில் சட்டமுறை எடையளவு சட்டம் 2009 மற்றும் சட்ட முறை எடையளவு பொட்ட லப் பொருட்கள் விதிகள் 2011-ன் கீழ் 59 நிறுவனங்க ளில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இதில் 10 நிறுவனங் களில் முரண்பாடுகள் கண்ட றியப்பட்டு, அபராத நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், 47 உணவு நிறுவனங்களில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனரா? எனவும், 37 வணிக நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்க ளுக்கு குறைந்தபட்ச ஊதி யச் சட்டம் 1948-ன்படி அரசு நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச ஊதியம் வழங்கப்படுகி றதா? என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் இதேபோன்று சிறப்பாய்வு கள் மேற்கொள்ளப்படும் என் றும், எனவே தொழிலாளர் நலச்சட்டங்களை நிறுவனங் கள் சரியாக கடைபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குன்னூர் தொழிலா ளர் உதவி ஆணையர் (அம லாக்கம்) சதீஸ்குமார் தெரி வித்துள்ளார்.
வாட்ஸ் அப் மூலம் வரலாறு மாற்றப்படுகிறது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை
பள்ளிபாளையம், மார்ச் 5- வரலாற்றை வாட்ஸ் அப் மூலம் மாற்றப் படுகிற சமூகமாக நம் சமூகம் உள்ளது என நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில், நீண்ட நாள் கோரிக்கை யான மறைந்த நாமக்கல் கவிஞர் ராமலிங்கத் தின் மார்பளவு வெண்கல சிலை திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. உயர்கல்வித்துறை அமைச் சர் க.பொன்முடி தலைமையில், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கவி ஞர் ராமலிங்கம் சிலையை திறந்து வைத்தார். இதில், வனத்துறை அமைச்சர் மா.மதிவேந் தன், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், மாநி லங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங் கம், கல்லூரி முதல்வர் (பொ) பாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் க.பொன்முடி பேசு கையில், இந்த நாமக்கல் என்ற ஊருக்கு பெருமை சேர்த்தவர் நாமக்கல் கவிஞர் இராம லிங்கம். ராமலிங்கம் மகளிர் கலைக்கல்லூரி 1969 ஆம் ஆண்டு முன்னாள் தமிழக முதல் வர் மு.கருணாநிதியால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு பெண்கள் அரசு கல்லூரி ஆகும். அப்பொ ழுது இந்த கல்லூரிக்கு கலைஞர் மு..கருணா நிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி என்று தான் பெயர் வைக்கப்பட்டது. இதையடுத்து 1981 ஆம் ஆண்டு நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் மகளிர் அரசு கலை கல்லூரி என்று பெயர் மாற் றம் செய்யப்பட்டது என்று க.பொன்முடி குறிப் பிட்டார். இதன்பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், நாமக்கல் கவிஞருக்கு சிலை வைப்பது மூலமாக, தமிழ் மொழிக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத் தின் அடையாளமாக திகழ்ந்தவர் மட்டுமல்ல; நாமக்கல் கவிஞர் ஒட்டுமொத்த தமிழ்நாட் டின் அடையாளமாக திகழ்பவர்தான். அவர் வரலாற்றை நாம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். இப்போதைக்கு இருக்கக் கூடிய சமூகம் அனைத்தையும், அனைவரை யும் மறந்து விடக்கூடிய ஒரு சமூகமாக இருக் கிறது. தன்னை முதல்வராக உருவாக்கிய ஒருவரையே நீங்கள் யார்? என்று கேட்ட ஒரு சமுதாயம் தான் நம் தமிழ் சமுதாயமாக இருக் கிறது. வரலாற்றையே வாட்ஸ் அப் மூலம் மாற்றி சொல்லுகின்ற சமூகமாக நம் சமூகம் இருந்து கொண்டிருக்கிறது. திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசும் நிலைமை இருக்கிறது. நாம் தான் ஜாக்கிரதை யாக இருக்க வேண்டும். இப்படி தமிழ்நாட் டின் வரலாற்றையே மாற்றக்கூடியவர்களும் இருக்க கூடிய காரணத்தினால், நாம் வரலாறு பற்றி எடுத்துச்சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும், என்றார்.