districts

img

கட்டுரை, ஓவிய போட்டிகள்: பரிசளிப்பு விழா

தாராபுரம், டிச.8- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பல்ல டம், ஆற்றல் திறன் பணியகம், தமிழ்நாடு அறிவியல் இயக் கம் ஒருங்கிணைப்பில் மின்சிக்கனம், மின் பாதுகாப்பு மற்றும்  ஆற்றல் குறித்த கட்டுரை, ஒவிய போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பல்ல டம், ஆற்றல் திறன் பணியகம், தமிழ்நாடு அறிவியல் இயக் கம் ஒருங்கிணைப்பில் மின்சிக்கனம், மின் பாதுகாப்பு மற்றும்  ஆற்றல் குறித்த கட்டுரை, ஒவிய போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசளிப்பு விழா ஜெய் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நி லைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பல்லடம் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் எஸ்.ஜவஹர் தலைமை வகித்தார். மின்பகிர்மான ஒருங்கிணைப்பாளர் எஸ்.சரண்யா வரவேற்றார். பல்லடம் செயற்பொறியாளர் (பொது) எம்.திருஞானசம்பந்தர், தாராபுரம் செயற்பொறி யாளர் வ.பாலன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில  செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி ஆகியோர் சுற்றுச்சூழல்  மாசுபடாமல் பாதுகாக்க மரபுசாரா எரிசக்தி ஆற்றல் பயன் படுத்துவது குறித்து சிறப்புரையாற்றினர். இதைதொடர்ந்து 16  பள்ளிகளை சேர்ந்த பரிசு பெற்ற குழந்தைகளுக்கு கேடய மும், சான்றிதழ்களும் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட  தலைவர் ஈஸ்வரன், செயற்பொறியாளர்கள் பல்லடம் சி.பழ னிச்சாமி, காங்கயம் ஜி.ரத்தினகுமார் மற்றும் மின்வாரிய பணி யாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு அறிவி யல் இயக்க கிளை செயலாளர் வி.நிவேதா நன்றி தெரிவித் தார்.