டாஸ்மாக் மதுக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளை போன சம்பவத்தில் அப்பாவி டாஸ்மாக் ஊழியரையே குற்றவாளியாக்கி ஈரோடு மாவட்ட காவல்துறை சிறை யில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
மூன்று மாதம் சிறையில் இருந்து வெளியே வந்த அப்பாவி டாஸ்மாக் ஊழியர் தனது வாழ்வாதா ரத்தை இழந்தும், அவப்பெயர் சுமந்தும் நடுத்தெருவில் நிற்பதாகவும், பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் டாஸ் மாக் மேலாளரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர் சங்கத்தி னர் கூறுகையில், ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலம் வட்டத்தில் டாஸ்மாக் கடை எண்.3691 செயல்படுகிறது. இங்கு விற்பனை யாளராக சண்முகம் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 6.3.2022 அன்று இரவு பூட்டப்பட்டிருந்த கடையில் இரண்டு பூட்டுகளை திறந்தும், ஒரு பூட்டை உடைத்தும் நள்ளிரவில் பணம் கொள்ளை யடிக்கப்பட்டது. மறுநாள் 7.3.2022 காலை 7 மணிக்கு கடை வாசலை கூட்டி சுத்தம் செய்ய வந்த நபர் மூலம் கடையிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்ட தகவல் பணியா ளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து கடை பணி யாளர்கள் அனைவரும் கடைக்கு வந்து சேர்ந்தனர். அப்போது கடையிலிருந்த விற் பனை பணம் சுமார் ரூ.2 லட்சம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது. இதேபோல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடையின் விடுமுறை நாளான அக்டோபர் 2 அன்று கடையைத் திறந்து ரூ.5000 பணமும், மதுபாட்டில் ஒரு பெட்டியும் கொள்ளை யடிக்கப்பட்டது. மறுநாள் சென்று பார்த்த போது இந்த சம்பவத்தில் எப்படி பூட்டு உடைக்கப்பட்டிருந்ததோ அதேபோல் தான் அன்றும் நடந்திருந்தது. கடையில் திருடு போனது குறித்து மாவட்ட மேலாளரிடம் தெரி வித்த போது, 30 ஆயிரம் ரூபாய் தானே, நீங்களே கட்டி விடுங்கள். இதையெல்லாம் காவல் துறையில் புகாராக கொடுக்க வேண் டாம் என கேட்டுக் கொண்டார். (பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்றே காவல்துறை யில் புகார் அளிக்காமல் கொள்ளையடிக் கப்பட்ட பணத்தை ஊழியர்களே தங்களது சொந்த பணத்தை கட்ட நிர்பந்தம் செய் யப்படுகின்றனர்) அதனால் அப்போது காவல் துறையில் புகார் செய்யவில்லை. ஆனால், இந்த முறை திருட்டுப் போன தொகை ரூ.2 லட்சம் வரை என்பதால் உடனடி யாக கடையின் மேற்பார்வையாளர் கடத்தூர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் கடை பணியாளர்கள் மற்றும் கட்டட உரிமை யாளரிடம் விசாரித்தனர். தொடர்ந்து கோபி காவல் துணை கண்காணிப்பாளரும் வந் தார். கடை பணியாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர் காவல் நிலையத்திற்கு அழைத்தும் விசாரணை நடத்தப்பட்டனர். இதன் பிறகு காவல் துறையினர் எழுத்து மூல மான புகார் கொடுக்க சொன்னார்கள். முதல் நாள் பணியிலிருந்த சண்முகம் என்பவர் புகார் கொடுப்பதற்கு தயாரான நிலையில், தன்னைத்தான் புகார் கொடுக்க வேண்டும் என மாவட்ட மேலாளர் தெரிவித்துள்ளதாகச் சொல்லி மேற்பார்வையாளர் புகார் கொடுத் தார். அதன் பிறகு மாவட்ட மேலாளர் மேற்பார் வையாளர் மூலம் சனி, ஞாயிறு இரண்டு நாட் கள் கடையின் விற்பனை பணத்தை செலுத்த வேண்டும் என சண்முகத்திற்கு நிர்பந்தம் கொடுத்துள்ளனர்.
இதனால் சண்முகம் தனது மனைவி யின் நகைகளை வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்கி திருட்டு போன தொகை யைக்கு ஈடாக செலுத்தினார். மறுநாள் 08.03.2022 செவ்வாயன்று காலை 10 மணிக்கு காவல் நிலையத்திலிருந்து அழைத்துள்ள னர். இதனையடுத்து காவல் நிலையம் சென்ற சண்முகம், அங்கிருந்து உடனடியாக கோபி டிஎஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு நீ தான் கடையின் பணத்தை எடுத்து சென்றிருப்பாய் என்றும், நீ பணத்தைக் கொள்ளையடித்ததாக ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் உன்னுடன் உனது மகனையும் சேர்த்து எப்ஐஆர் போட்டு விடுவேன் என்று மிரட்டி யுள்ளனர். இதனையடுத்து பொய்வழக்கு புனையப்பட்டு சண்முகத்தை சிறையில் அடைத்தனர்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பினையில் வெளிவந்த சண்முகம் டாஸ்மாக் ஊழியர் சங்க நிர்வாகிகளிடம் நடந்தவை கள் குறித்து தெரிவித்துள்ளார். இதனைய டுத்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் சசிதரன் மற்றும் ஈரோடு டாஸ்மாக் மேலா ளரிடம் பாதிக்கப்பட்ட சமுகம் மற்றும் சிஐ டியு டாஸ்மாக் ஊழியர் சங்க செயலாளர் வை.பாண்டியன் உள்ளிட்டோர் புகார் அளித்துள்ளனர். இதில் தன்மீது பொய்யான வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தும், தனது வாழ்வாதாரத்திற்கு துணை நின்ற பணியை பறித்தும், மனஉளைச்சலை ஏற் படுத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தெரிவித்துள்ளார். பணத்தை பறிகொடுத்தவரிடமிருந்தே நிர்வாகத்திற்கு வரவேண்டிய பணத்தை டாஸ்மாக் மாவட்ட மேலாளர் பெற்றுள்ளார். அதேசமயம் காவல் துறையினரும் பாதிக்கப் பட்டவரையே குற்றவாளியாக்கி கடமையை நிறைவேற்றியுள்ளனர். இதனால், டாஸ் மாக் நிர்வாகத்தால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு சண்முகம் வேலையிழந்துள் ளார். இந்நிலையில், தன்மீது வழக்கு பதிவு என்பது எந்தவிதமான அடிப்படையற்றதும், உண்மைக்கு மாறானதுமாகும். முழுமை யான, நேர்மையான பாரபட்சமற்ற விசா ரணை மேற்கொள்ளவும், அதன் மூலம் உண்மையான குற்றவாளியை கண்டறிய வும் வேண்டும். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தையும் மீட்க வேண்டும். தற்காலிக பணி நீக்கத்தில் உள்ளதால் ஊதியமோ, பிழைப்பூதியமோ எதுவும் கொடுக்கப்பட வில்லை. இதனால் மிகக் கடுமையான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளேன் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்திடம் சில்லரை விற் பனை கடையின் விற்பனையாளர் சண்முகம் முறையிட்டுள்ளார். ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்படக்கூடாது என்கிற கூற்றை சட்ட கடமையாற்றுகிற காவல்துறையினரே மீறலாமா. அப்பாவி யின் குரலுக்கு நியாயம் வேண்டும் என்கிற குரலை அதிகாரிகள் நிறைவேற்றுவார்களா என்கிற எதிர்பார்ப்பு டாஸ்மாக் ஊழியர்களி டையே எழுந்துள்ளது.
-சக்திவேல், ஈரோடு