தலித் மக்கள் குடியிருப்பில் ஸ்டாலின் திடீர் ஆய்வு
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கரூரில் அரசு நிகழ்ச்சி யிலும், நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வெள்ளியன்று மாலை வந்தார். அதன் தொடர்ச் சியாக சனியன்று நாமக்கல் மாவட் டத்திற்கு வந்த முதல்வர் ஸ்டா லின், சிலுவம்பட்டி ஊராட்சி, அருந்ததியர் குடியிருப்புக்கு திடீ ரென சென்று ஆய்வு மேற் கொண்டு, அங்குள்ள பொது மக்களிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து 3 சதவிகித உள் ஒதுக்கீட்டில் மருத்துவம், பொறி யியல் மற்றும் பல்வேறு உயர் கல்வி பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதன்பின் ஹோமியோபதி மருத்துவர் ஜெய பிரகாஷ் என்பவரது வீட்டிற்கு சென்று குடும்பத்தினருடன் கலந் துரையாடினார். இதில், அவர் களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கல்வி குறித்த விவரங் களையும், அக்குடியிருப்பில் எத்தனை குடும்பங்கள் உள்ளன என்பது குறித்தும்? கேட்டறிந் தார். அத்துடன் குடியிருப்பில் குடி நீர், மின்சார வசதி போன்றவை குறித்தும் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து, கோவை மருத்துவக்கல்லூரியில் மருத்து வம் படித்து வரும் கவின் என்ற மாணவனுடனும், புதுக்கோட் டையில் மருத்துவம் படித்து வரும் தாரணி என்ற மாணவியுடனும் உரையாடிய ஸ்டாலின், அவர் களது மேற்படிப்பு குறித்து கேட்ட றிந்தார். மேலும், கல்வி தான் ஒரு வருக்கு மிகப்பெரிய செல்வம், யாராலும் அழிக்க முடியாதது கல்வி தான். எனவே, நன்கு உயர் கல்வி படித்து சமுதாயத்திற்கும், மாநிலத்திற்கும் சேவை ஆற்றிட வேண்டும் என அறிவுறுத்தி னார். முன்னதாக, இந்த ஆய்வின் போது நாமக்கல் மாவட்ட ஆட்சி யர் ஸ்ரேயா பி சிங் உள்ளிட்ட அதி காரிகள் உடனிருந்தனர்.
நாமக்கல், ஜூலை 4– உள்ளாட்சி நிர்வாகத்தில் தலை மையேற்றுக்கும் பெண்கள் கண வரிடம் பொருப்பை கொடுக்காமல் தன்னிச்சியாக செயல்படுங்கள் என நாமக்கல்லில் நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். உள்ளாட்சியிலும் நல்லாட்சி என்ற தலைப்பில், நகர்ப்புற உள் ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு நாமக்கல் பொம்மைகுட்டைமேட் டில் ஞாயிறன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு தலைமையேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகை யில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்த லில் திமுக, அதன் கூட்டணி கட்சி களின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். உள் ளாட்சி அமைப்புகள்தான் மக்க ளாட்சியின் உயிர்நாடியாகும். மக் கள் பணியில் முதல் பணி என்பது உள்ளாட்சி அமைப்புகள் தான்.
அதன் மூலமாகத்தான் உரிய பயிற்சி பெற முடியும். இந்த பத வியை மக்களுக்காகவே நீங்கள் பயன்படுத்த வேண்டும். மாநக ராட்சி மேயர் உள்ளிட்டு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி வரையில் பெண்கள் தலைமை தாங்குகிறார் கள். பெண்களுக்கு வழங்கப்பட்ட பொருப்பை கணவரிடம் வழங்கா தீர்கள். மக்களின் நிலை அறிந்து தன்னிச்சையாக செயல்படுங்கள். தமிழகத்தின் எதிர்காலம் திமுக வின் கையில்தான் ஒப்படைக்கப்பட் டுள்ளது. யாரோ ஒருவர் செய்யும் தவறுக்கு திமுக தொண்டர்கள் தலைகுனியக்கூடாது. விருப்பு, வெறுப்பை ஒதுக்கி வைத்துவிட்டு மக்கள் நலப்பணிகளை உறுதியு டன் செயல்படுத்த வேண்டும். உள்ளாட்சிப் பிரதிநிதிகளாகிய உங்களுக்கு முதலில் தேவை ஒற் றுமைதான். அந்த ஒற்றுமை இல் லையெனில் அனைத்துப் பணிக ளும் முடங்கிவிடும். உள்ளாட்சி பிர திநிதிகள் தங்களுடைய பொறுப்பு களில் இருந்து கொண்டு நிர்வா கத்தில் முறைகேடு செய்வது, ஒழுங் கீனமாக நடப்பது ஆகியவைகள் கவனத்திற்கு வந்தால் கடும் நட வடிக்கை எடுப்பேன், என்றார். முன்னதாக மாநாட்டிற்கு மாநி லம் முழுவதும் இருந்து திமுக சார்பில் வெற்றிபெற்ற உள்ளாட்சி மன்ற தலைவர்கள் திரளாக பங் கேற்றனர். நீர்வளத்துறை அமைச் சர் துரைமுருகன், நகராட்சி நிர்வா கத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, சுற்றுலாத்துறை அமைச் சர் எம்.மதிவேந்தன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வா கிகள் திரளானோர் பங்கேற்றனர்.