திருப்பூர், நவ. 25- பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பாதுகாக்கவும், ஊழியர்களை கட்டாயப்படுத்தி விருப்ப ஓய்வுத் திட்டத்தில் வெளியேற்ற முயல்வதை எதிர்த்தும் திங்களன்று பிஎஸ்என் எல் ஊழியர்கள் பட்டினிப் போராட் டத்தில் ஈடுபட்டனர். விருப்ப ஓய்வூதியத் திட்டத்தை கட்டாயப்படுத்தி அமல்படுத்த முயல்வதை கைவிட வேண்டும், விஆர்எஸ்இல் ஓய்வூதியம், பணிக் கொடை குறித்த குழப்பங்களைக் களைவது, 3ஆவது ஊதிய மாற்றத்தை அமலாக்குவது, 4 ஜி சேவையை உடனே தொடங்குவது, உரிய தேதி யில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது, ஒப்பந்த ஊழியர் நிலு வைத் தொகையை உடனடியாக வழங்குவது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழி யர்களின் அனைத்து சங்கங்களின் சார்பில் நாடு முழுவதும் உண்ணாவி ரத போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மெயின் தொலைபேசி நிலைய வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கக் கிளைத் தலைவர்கள் உண்ணிகிருஷ்ணன், ரவிச்சந்திரன், சங்கிலிதுரை ஆகியோர் தலைமை ஏற்றனர். மாவட்டத் தலைவர் முகமது ஜாபர், ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் பா.சௌந்தரபாண்டியன், பிஎஸ்என்எல் இயு சங்கத்தின் மாநில உதவிச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி யன், மாவட்ட நிர்வாகிகள் காந்தி, விஸ்வநாதன், கல்யாணராமன், கிளைச் செயலாளர்கள் குமரவேல், வின்சென்ட், தங்கராஜ், ஒப்பந்த ஊழியர் சங்க நிர்வாகி ரமேஷ், எப்என் டிஓ நிர்வாகி தனபதி, சிஐடியு மாவட் டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர். இப்போராட்டத்தில் பிஎஸ்என் எல் ஊழியர் சங்கம், பிடிஇயு, என்யூ பிஎஸ்என்எல்டபிள்யூ, பிஎஸ்என்எல் எம்எஸ், பிஎஸ்என்எல் ஏடிஎம், பிஎஸ் என்எல் ஓஏ ஆகிய சங்கத்தைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர். முன்னதாக அலுவலக வாயில் முகப் பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை
கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு பிஎஸ் என்எல் இயு மாவட்ட உதவி செயலா ளர் எஸ்.சந்திரசேகரன் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன், ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங் கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். பொள்ளாச்சி பிஎஸ்என்எல் அலு வலகத்தில் நடைபெற்ற போராட் டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் பொள்ளாச்சி வட்டக் கிளைத் தலைவர் சாகுல் அமீது தலைமை வகித்தார். கோவை மாவட்ட அமைப்பு செயலாளர் பி.தங்கமணி, மாவட்ட பொருளாளர் எஸ்.மகேஷ்வரன், மாநில அமைப்பு செயலாளர் என்,பி,ராஜேந்திரன், என்,சக்திவேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். முடிவில், உடு மலை கிளை செயலாளர் ரங்கசாமி நன்றி கூறினார் .
ஈரோடு
ஈரோடு பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம் முன்பு திங்க ளன்று நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழி யர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.கண்ணுசாமி தலைமை வகித் தார். மாநில செயலாளர் ஏ.பாபு ராதா கிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் சி.பரமசிவம், எல்.பரமேஸ்வரன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.மணி, ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.பழனிச்சாமி, பிஎஸ் என்எல் டிஒடி ஓய்வூதியர்கள் சங்கத் தின் மாவட்ட செயலாளர் என்.சின்ன சாமி உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.
தருமபுரி
தருமபுரி பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் டி. பாஸ்கரன் தலைமை வகித்தார் மாநில உதவி செயலாளர் எம்.பாபு, மாவட்ட உதவி தலைவர் ஆர்.பழணி, மாவட்ட உதவி செயலாளர் ஏ.தங்கவேல், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம்.பரிதிவேல் ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிப்பேசினர். முடிவில், எம்டிஎக்ஸ் கிளைசெய லாளர் சி.முனிராஜ் நன்றி கூறினார்.
சேலம்
சேலம் பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகத்தில் நடை பெற்ற போராட்டத்திற்கு ஊழியர் சங்க மாவட்ட உதவித் தலைவர் எம். விஜயன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் எஸ்.ஹரிஹரன் துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் இ. கோபால் சிறப்புரையாற்றினார். ஒப் பந்த தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம். செல்வம், ஓய்வு பெற் றோர் சங்க செயலாளர் மதியழகன், மாவட்ட உதவி செயலாளர் எஸ். ராம சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங் கினர் . முடிவில், ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பி.தங்கராஜ் நன்றி கூறினார். இதில் 200க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள் பங்கேற்றனர்.
நீலகிரி
நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்கா எதிரே உள்ள பிஎஸ் என்எல் அலுவலகம் முன்பு நடை பெற்ற உண்ணாவிரத போராட்டத் திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத் தின் உதகை கிளைச் செயலாளர் ஆர். பசுபதி, தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ் கென்னடி ஆகியோர் தலைமை தாங்கினர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் ஆர்.ஜேக்கப் மோரிஸ் போராட்டத்தை துவக்கி வைத்து பேசி னார். மாவட்ட உதவிச் செயலாளர் ஜெ.பிரின்ஸ், ஜிஎம்ஓ கிளை செய லாளர் கே.ஆர்.ரவி ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசினர். முன் னாள் மாவட்ட செயலாளர் ஆர்.பத்ரி பழரசம் கொடுத்து உண்ணாவிரத போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். இதில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழி யர்கள் ஏராளமானோர் கலந்து கொண் டனர். கூடலூரில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு கிளை தலைவர் கே சுந்தரம் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் எஸ்.அருள்செல்வம் துவக்கி வைத்து பேசி னார். பிஎஸ்என்எல் ஓய்வு சங்கத்தின் நிர்வாகி முத்துகிருஷ்ணன் வாழ்த் துரை வழங்கினார். எஸ்என்இஏ சங்கத்தின் நிர்வாகி ஜேம்ஸ் பழரசம் கொடுத்து உண்ணாவிரத போராட் டத்தை முடித்து வைத்தார்.