districts

img

குறைந்த பட்ச சம்பளம் ரூ.544ஐ வழங்கிடுக

நாமக்கல், நவ. 11- பஞ்சாலைத் தொழிலில் பணிபு ரியும் அனைத்து ஆண், பெண்  தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்ச சம்பளம் ரூ.544 ஐ வழங்கிட வேண்டும் என சிஐடியு பஞ்சாலை தொழிலாளர் சங்க மாநில சம்மே ளனக் குழு வலியுறுத்தி உள்ளது.  தமிழ்நாடு பஞ்சாலை தொழிலா ளர் சம்மேளனத்தின் மாநிலக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் எம். சந்தி ரன் அவர்கள் தலைமையில் நாமக் கல் மாவட்டம் - வெப்படை சிஐடியு  அலுவலகத்தில் திங்களன்று  நடை பெற்றது.  நாமக்கல் மாவட்டச் செய லாளர் எஸ்.தனபால் வரவேற்றார். பொதுச்செயலாளர் எம்.அசோ கன், சம்மேளனக் குழு அறிக்கையை  முன்வைத்தார். கூட்டத்தில், ஒன்றிய அரசின் கட் டுப்பாட்டில் உள்ள என்டிசி பஞ் சாலைகள், கடந்த நான்கு ஆண்டுக ளாக இயக்கப்படாமல் உள்ளது.  அதை நம்பியிருந்த பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் பாதிப் படைந்து உள்ளனர். மூடப்பட்டுள்ள  என்டிசி பஞ்சாலைகளை உடனடி யாக திறந்திட வேண்டும். தமிழ் நாட்டில் கூட்டுறவு பஞ்சாலைகள் கடந்த காலத்தில் தமிழ்நாட்டில் 18க் கும் மேற்பட்ட கூட்டுறவு பஞ்சாலை கள் இயங்கி வந்தன. தற்பொழுது கன்னியாகுமரி, தூத்துக்குடி, இரா மநாதபுரம், புதுக்கோட்டை, தேனி,  கிருஷ்ணகிரி ஆகிய ஆறு மாவட் டங்களில் மட்டும் கூட்டுறவு பஞ் சாலைகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக ஆதிராவிடர் மற்றும் பெண்கள் நலனுக்காக இராம நாதபுரம் கூட்டுறவு பஞ்சாலை இயங்கி வருகிறது. கூட்டுறவு பஞ் சாலைகளில் நிரந்தரம் என்று பணி புரிந்து வருபவர்கள் 320 பேர் மட் டுமே. சுமார் 1500 க்கு மேல் தினக் கூலி மற்றும் ஒப்பந்த முறையில் தொழிலாளர்கள் பணிபுரிந்து வரு கின்றனர். இரண்டு ஆண்டுகளில் 480 நாள் பணிபுரிந்து இருந்தால் சட் டப்படி பணி நிரந்தரம் செய்ய வேண் டும் என்ற சட்டம் பின்பற்றப்படுவது இல்லை. தொழிலாளர் துறை அதி காரிகள் பிறப்பிக்கும் பணி நிரந்த ரம் குறித்த உத்தரவுகளும் அமலாக் கப்படாமல் தொழிலாளர் நலனுக்கு எதிராக மேல்முறையீடுகள் செய் யப்படுகிறது. பணிபுரியும் 1800 தொழிலாளர்க ளில் மூன்றில் இரண்டு பங்கு சுமார்  1200 பெண் தொழிலாளர்கள் கூட்டு றவு பஞ்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர் . அவர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். பணி நிரந்தரம் உட்பட சட்டப்படியான உரிமைகள் வழங்க வேண்டும்.  நாமக்கல் மாவட்டத்தில் ஏராள மான ஸ்பின்னிங் மில் நூற்பாலை கள் செயல்பட்டு வருகிறது. இதில்  சரி பாதி வட மாநில தொழிலாளர் கள் அதிகளவு வெப்படை பகுதி யில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மிக குறைந்த அளவி லேயே சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே, பஞ்சாலைகளில் பணிபுரி யும் ஆண், பெண் தொழிலாளர்க ளுக்கு அரசு அறிவிப்பின்படி குறைந்தபட்ச சம்பளமாக ரூ. 544 ஐ  உடனடியாக வழங்கிட வேண்டும்.  அனைவருக்கும், சட்டபூர்வ உரி மைகளை வழங்கிட வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. கூட்டத்தில் மாநிலப் பொருளா ளர் எஸ்.சக்திவேல், மாநில நிர்வாகி கள் ஆர்.வெங்கடாச்சலம் (நாமக் கல் ) ஜி.கணேசன் (விருதுநகர்), சி. ஈஸ்வர மூர்த்தி (திருப்பூர்) ஈஸ்வரன்  (திண்டுக்கல்) உட்பட மாநில நிர் வாகிகள் - மாநிலக் குழு உறுப்பினர் கள் பங்கேற்றனர்.