ஈரோடு, ஆக.27- அரசு துறையில் காலியாக உள்ள 4.50 லட்சம் பணியிடங்களை நிரப்ப அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பெருந்துறை வட்ட 16 ஆவது மாநாடு வட் டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடை பெற்றது. துணைத்தலைவர் ஜே.எட்வின் பிரசாத் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் என்.முரளிகிருஷ்ணன் வரவேற் றார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ரமேஷ் தொடக்க உரையாற்றினார். மாநில துணை பொதுச் செயலாளர் மு.சீனிவாசன் சிறப்புரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் ச.விஜய மனோகரன் நிறைவுரையாற்றினார். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வரு வாய் கிராம உதவியாளர், எம்ஆர்பி செவிலி யர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட் டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2003க்கு முன்பாக பணியில் சேர்ந்த அனைத்து பணி யாளர்களையும் வருங்கால வைப்புநிதி திட்டத்தில் சேர்க்க வேண்டும். சாலை பணி யாளர்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். பறிக் கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர், வருங் கால வைப்பு நிதி வட்டி குறைப்பு ஆகிய அரசாணைகளை உடனே திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. தலைவராக கவிதா, உதவி தலைவர் களாக ஜெ.எட்வின் பிரசாத், ரத்தினம், பி. புவனேஸ்வரி, செயலாளராக டி.கோமதி, இணைச்செயலாளர்களாக செ.மாதேஸ் வரன், கே.பழனியம்மாள், மாவட்ட செயற் குழு என்.முரளிகிருஷ்ணன், மகளிர் துணைக் குழுவிற்கு எம்.செல்வி, பொருளாளராக ஜி. சசிகலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.