districts

img

பள்ளிக்கூடம் செல்லும் பாதையில் ஊராட்சி குப்பை கொட்டும் அவலத்தை தடுக்க வலியுறுத்தல்

திருப்பூர், ஜன. 17 - திருப்பூர் மாநகராட்சி மற்றும் காளிபாளையம் ஊராட்சி எல்லைப்  பகுதியில் பள்ளிக்கூடம் செல்லும் பாதையில் குப்பை கொட்டும் அவ லத்தைத் தடுக்க வேண்டும் என்று அப் பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். திருப்பூர் மாநகராட்சி 5ஆவது  வார்டுக்கு உட்பட்டது குருவாயூரப் பன் நகர். இப்பகுதி காளிபாளையம்  ஊராட்சியின் எல்லையில் அமைந்தி ருக்கிறது. குருவாயூரப்பன் நகர் அருகே காளிபாளையம் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு இந்த  சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் படித்து வருகின்றனர்.  இந்நிலையில் இப்பள்ளிக்குச் செல்லும் வழியில் சில நூறு மீட்டர் தொலைவில் காளிபாளையம் ஊராட்சி மற்றும் திருப்பூர் மாநகராட் சியின் குப்பைகள் கொட்டப்படுகின் றன. இதனால் பள்ளிக்குச் செல்லும்  மாணவ மாணவிகள் கடும் துர்நாற் றம், ஈ, கொசு பூச்சித்தொல்லை ஆகி யவற்றின் இடையே கடந்து செல்ல வேண்டி இருக்கிறது. மேலும் இதனால் பள்ளி வளாகத்திலும், வகுப்பறைகளிலும் பாதிப்பு ஏற்படு கிறது. மேலும், இதே பகுதியில் இருக் கும் மயானம் வேலி மரம், செடி,  கொடி, புல், புதர் மண்டி கிடக்கிறது.  அங்கு வருவோருக்கு இடையூறாக வும், பாம்பு, பல்லி, பூச்சிகளின்  இருப்பிடமாகவும் இருக்கிறது. எனவே பள்ளிக்கூடம் அருகே மாநகராட்சி, ஊராட்சி நிர்வா கங்கள் குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டும், இங்கு கொட்டப் பட்டுள்ள குப்பைகளை அகற்றி, முழு மையாக தூய்மைப்படுத்தி பள்ளி  மாணவ, மாணவிகளுக்கு நோய்  தொற்று ஏற்படாமல் சுகாதாரத்தை  பாதுகாக்க வேண்டும். குருவாயூரப் பன் நகரில் இருந்து ஆறு கால் சாவடி  செல்லும் சாலையில், குப்பையை தூய்மைப்படுத்த வேண்டும். அத்துடன் மயானத்திலும் புதர் களை அகற்றி, முழுமையாகத் தூய் மைப்படுத்தி, முறையாக பராமரிக்க வேண்டும், என்றும் இப்பகுதி மக் கள் சார்பாக குருவாயூரப்பன் நகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் சந்திரன் கேட்டுக் கொண்டார்.