districts

img

மின்சார வாகனம் தீப்பிடித்து சேதம்

சேலம், அக்.13- எடப்பாடி அருகே மின் சார வாகனம் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் அப்பகு தியில் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், எடப் பாடி நகராட்சிக்குட்பட்ட வெள் ளாண்டி வலசு, அம்மன் நகர் 2 ஆவது வீதியைச் சேர்ந்தவர் வரதராஜன். இவர் தனது மின்சார ஸ்கூட்டருக்கு காலையில் சார்ஜ் செய்ய மின்  இணைப்பு கொடுத்துள்ளார். சிறிது நேரத்திற்கு பிறகு மின்  இணைப்பை துண்டித்த அவர், ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து  அலுவலகம் புறப்பட தயாரானார். அப்போது எதிர்பாராமல் அந்த மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கி யது. தீ மளமளவென வாகனம் முழுவதும் எரிந்ததால், அதிர்ச்சியடைந்த அவர் வண்டியை அப்படியே போட்டு விட்டு, பயத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதைய டுத்து வாகனம் தீப்பற்றி எரிவதை கண்ட அக்கம் பக்கத்தி னர், தண்ணீர் ஊற்றி எரிந்து கொண்டிருந்த மின்சார ஸ்கூட் டரை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. எடப் பாடி தீயணைப்பு வாகனம் வருவதற்குள், வாகனம் முழு வதும் எரிந்தது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.