திருப்பூர், ஆக.27- திருப்பூரில் உள்ள ரேசன் கடைகளில் துவரம் பருப்பு கிடைக்காமல் பொது மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்படவில்லை. ஜூன் மாதம் துவரம் பருப்பு கூடுதலாக கொள் முதல் செய்யப்படும். எனவே ஜூன் மாதம் விநியோகிக்கப்படும் பொழுது, முந்தைய மாத துவரம் பருப்பையும் குடும்ப அட்டை தாரர்கள் ரேசன் கடைகளில் கேட்டு வாங்கிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித் தது. ஆனால் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் என மூன்று மாதங்களாக, பொதுமக்கள் ரேசன் கடைகளில் துவரம் பருப்பு கிடைக்காமல் அல்லாடுகின்றனர். இதுகுறித்து பெண்கள் கூறுகையில், அரசு அறிவிப்பை காட்டி ரேசன் கடைகளில் துவரம் பருப்பு வழங்கும்படி கேட்டால், இன் னும் பருப்பு வரவில்லை என்று சொல்லி கடை விற்பனையாளர்கள் அலைக்கழிக் கின்றனர். ஒரு முறைக்கு பல முறை நடை யாய், நடந்தாலும் பருப்பு வரவில்லை என்ற பதிலே கிடைக்கிறது. தற்போது வெளி மார்க் கெட்டிலும் பருப்பு விலை கடுமையாக உயர்ந்து இருப்பதால், ரேசன் கடை பருப்பை நம்பி இருக்கின்றோம். ஒரு சில கடைகளில், ஒரு மாதத்திற்கான அளவு என்ற முறையில் ஒரு கிலோ துவரம் பருப்பு மட்டுமே வழங்கி னர். முந்தைய மாத துவரம் பருப்பையும் கேட் டால், குறைவான ஒதுக்கீடு தான் செய்யப்பட் டுள்ளது. இரண்டு மாதத்திற்கான அளவு துவ ரம் பருப்பு வரவில்லை என்று விற்பனையா ளர்கள் கூறுகின்றனர். ஊடகங்களில் அரசு அறிவிப்பு ஒரு மாதிரி இருக்கிறது, நேரடியாக கடைக்குச் சென்றால் பருப்பு கிடைப்ப தில்லை என்று பெண்கள் வேதனையுடன் கூறுகின்றனர். இது பற்றி கடை விற்பனையாளர்களிடம் கேட்டபொழுது, ஆயிரம் கார்டுகள் இருக்கக் கூடிய ஒரு கடைக்கு, 600 கிலோ, 700 கிலோ துவரம் பருப்பு மட்டுமே அனுப்புகின்றனர். இப்படி இருக்கும்போது வழக்கமாக அனைத்து கார்டுகளுக்கும் வினியோகம் செய்ய வேண்டிய ஒரு மாதத்திற்கான துவரம் பருப்பையே கொடுக்க முடியவில்லை. இதில் எங்கே இரண்டு மாத ஒதுக்கீடை கொடுப்பது? பொது விநியோகத் துறை மேலதிகாரிக ளைத் தான் கேட்க வேண்டும். கடைக்கு ஒதுக் கப்படும் அளவீட்டையும் குறைத்துவிட்டு, மக்களிடமும் இரண்டு மாதங்களுக்கான அளவைப் பெற்றுக் கொள்ளுங்கள் என அதி காரிகள் சொல்லி விடுகின்றனர். ஆனால் எங் கள் பாடு திண்டாட்டமாக உள்ளது. இரண்டு பக்கமும் நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. பொதுமக்களிடம் உண்மை நிலைமையை சொன்னாலும், அவர்கள் வாக்குவாதம், சச்சரவு செய்கின்றனர். இத னால் ரேசன் கடை விற்பனையாளர்கள் பலர் மன உளைச்சலில் சிக்கி உள்ளனர் என்று தெரி வித்தனர். ரேசன் கடையில் விற்பனையை பாயிண்ட் ஆப் சேல் முறையில் இணையத்தின் மூலம் ஒருங்கிணைத்து இருப்பதால், ஒவ்வொரு கடைக்கும் ஒதுக்கீடு எவ்வளவு, இருப்பு எவ்வளவு இருக்கிறது என்ற விபரத்தை அனைவரும் செல்போனிலேயே தெரிந்து கொள்ள முடியும். இதில் விற்பனையாளரா கிய நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என் றும் தெரிவித்தனர். அதேசமயம் கடந்த மூன்று மாதங்களாக, நகரங்களிலும், கிராமப் புறங்களிலும் பொதுமக்கள் துவரம் பருப்பு கிடைக்காமல் அல்லாடுகின்றனர். எனவே, அரசு நிர்வாகம் உண்மை நிலையை தெளிவுபடுத்தி, அனைத்து கார் டுகளுக்கும் மாதாந்திர அளவு மட்டுமின்றி, முந்தைய மாத அளவு துவரம் பருப்பையும் விநியோகம் செய்ய உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று பெண்கள் வலியுறுத்தினர்.