ஈரோடு, ஜுலை 17- சர்க்கரை நோய்க்கான மருந்து ரூ. 15க்கும் கிடைக்கிறது. ரூ 95க்கும் விற்கப்படுகிறது. மருந்து துறை யில் கொள்ளை லாபம் பார்ப்ப தால் பொதுமக்கள் தங்களின் வரு வாயில் பெரும்பகுதி மருத்துவ செலவிற்கே போய்விடுகிறது என மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங் கத்தின் சிறப்பு கருத்தரங்கம் குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்நாடு மருந்து விற்பனை பிர திநிதிகள் சங்கத்தின் 30 ஆவது மாநில மாநாட்டையொட்டி ஈரோட் டில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற் றது. சங்கத்தின் மாநில தலைவர் பி. சத்தியநாராயணன் தலைமை தாங் கினார். மாறிவரும் மருத்துவமும், மக் களை வதைக்கும் மருத்துவ செல வும் என்கிற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு டிஎன்எம்எஸ் ஆர்ஏ ஈரோடு கிளை செயலாளர் எஸ்.நாராயணசாமி வரவேற்றார். இதில், டிஎன்எம்எஸ்ஆர்ஏ மாநில பொது செயலாளர் சி.பிரபாகர் தேவதாஸ் பங்கேற்று சிறப்புரை யாற்றினார். இதில், இந்திய மருத் துவ சங்க ஈரோடு கிளை செயலா ளர் டி.சரவணன், ஈரோடு மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க செயலா ளர் எஸ்.செந்தில்குமார் உள்ளிட் டோர் பங்கேற்று கருத்துரையாற்றி னர். முன்னதாக கருத்தரங்கில் பங் கேற்ற தலைவர்கள் பேசுகையில், உயிர்காக்கும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி விதித்திருப்பதால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சர்க் கரை வியாதிக்கு வாழ்நாள் முழுவ தும் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்து 15 ரூபாய்க்கும் உள்ளது. அதே வகையான மருந்து ரூ. 95க்கும் விற்கப்படுகிறது. இதனை முறைப்படுத்தாமல் ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்கிறது. மருந்து களை நிறுவனங்கள் தீர்மானிக்கும் விலையில், அரசு வரி விதிப்பு கொள்கையில் மாற்றம் வேண்டும். அதேசமயம் சுகாதாரத்திற்கு ஒன் றிய அரசு ஒதுக்கும் நிதி மிகக் குறைவு. மிக மோசமான இந்த கொரோனா காலத்தில் கூட சுகாதா ரத்திற்கு அரசின் நிதி ஒதுக்கீடு மிகச் சிறிய அளவே ஒதுக்கீடு செய்யப் பட்டது. குறைந்தபட்சம் இந்திய உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 5 சத விகிதம் சுகாதாரத்திற்கு ஒதுக்க வேண்டும். அப்போதுதான் மருந் தும், மருத்துவமும் மக்களுக்கு குறைந்த விலையில் மிக எளிமை யாகக் கிடைக்கும்.
கொரோனா காலத்தில் 9 பேர் மட்டும் 13.3 பில்லியன் சம்பாதித் துள்ளனர். மருத்து துறையில் லாப மில்லாமல் நடத்த வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் கொள்ளை லாபத்தைத் தான் கண் டிக்கிறோம். ஒன்றிய அரசு நடத்தும் மருந்து கடைகளில் குறைந்த விலையில் கிடைக்கிறது என்றால், மற்ற கடைகளிலும் அதே விலை யில் மருந்து கிடைக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை. காரணம் ஒன்றிய அரசு கடைகளுக்கு மருந்துகள் வாங்குவதில் ஊழல் நடைபெறுவதாக ஆய்வுகள் கூறு கிறது. பொதுத்துறையில் மருந்து தயா ரிப்பு நிறுவனங்கள், ஆலைகள் இன்று இல்லை. ஏற்கனவே இருந் ததை மூடி விட்டனர். வெளியில் மருந்து வாங்குவதால் தரமற்ற, போலி மருந்துகள் விற்பனைக்கு வாய்ப்பு உள்ளது. எது நல்ல மருந்து என தெரியவில்லை. 355 அத்தியாவசிய மருந்துகள் விலை கட்டுப்பாட்டில் உள்ளதா கக் கூறுகிறார்கள். ஆனால் 18 சதவி தமான மருந்துகள் மட்டுமே விலை கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. மற் றவை என்ன விலைக்கு வேண்டுமா னாலும் விற்றுக் கொள்ளலாம் என் கிற நிலை உள்ளது. முகத்திற்குப் பூசும் பவுடரைக்கூட மாத்திரை யாக்கி அனுப்பி வருவதாக ஆய்வு கள் கூறுகின்றன. தடை செய்யப் பட்ட மருந்துகள் வரும் அபாயமும் உள்ளது. மருந்து துறையானது மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அடிப்படையில் இருக்க வேண்டும் என்றார். முடிவில் ஏ.ஆர்.சங்கரன் நன்றி கூறினார்.