திருப்பூர், டிச.26- திருப்பூரில் பிரசவ காலத்தில் பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மருந்துகளை மருத்துவர்களின் பரிந்துரை இன்றி பயனாளிகளுக்கு கொடுத்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில் மூன்று மருந்தகங்களில் போதைப் பொருள் நுண்ணறிவு தடு புப் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற் கொண்டனர். திருப்பூர் மாநகரில் பிரசவ காலத் தில் கொடுக்கப்படும் வலி நிவாரணி மருந்துகளை போதைக்காக பயன் படுத்துவதாகவும், மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இன்றி வலி நிவாரணி மருந்துகள் கொடுக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. அப்புகாரின் பேரில் போதைப்பொருள் நுண்ணறிவு தடுப்புப் பிரிவு (என்.ஐ.பி) அதிகா ரிகள் ஞாயிறன்று திருப்பூர் போயம் பாளையம், செட்டிப்பாளையம் பகுதி யில் உள்ள தனியார் மருந்துக்கடை களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், வலி நிவாரணி மருந்துகள் விற்பனை செய்யப்பட்ட பில் மற் றும் தரவுகளைக் கைப்பற்றி மருத் துவரின் பரிந்துரை சீட்டு இன்றி மருந்துகள் வழங்கப்பட்டதா? என ஆய்வு செய்தனர். மேலும், இது தொடர்பாக 1945 டிரக்ஸ் சட்டப்பிரிவு 64-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.