districts

img

சென்னை பல்கலை.யில் குடிநீர் வசதி, கேன்டீன் கோரி

சென்னை, ஏப். 5 - குடிநீர் வசதி கேட்டு  சென்னை பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கணக் கான மாணவர்கள் பயின்று  வருகின்றனர். பல்கலைக் கழக வளாகத்தில் துறைகள் தோறும் குடிநீர் வசதி இல்லை. கழிப்பிடங்களும் போதிய அளவு இல்லை. இதனால் மாணவர்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், இந்திய  மாணவர் சங்கத்தின் தலை மையில் மாணவர்கள் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா கட்டிடம் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் எஸ்.மிருதுளா, “மாணவர்கள் குடிக்க தண் ணீர் இல்லை. ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக குடிநீர் வசதி செய்து தர  வேண்டும். கழிப்பிட வசதி களை மேம்படுத்தி கொடுக்க  வேண்டும்” என்றார். “மாணவிகளை மட்டும்  இரவு 9 மணிக்குள் விடுதிக்கு வர வேண்டும் என்று விதி வைத்துள்ளனர். ஆராய்ச்சி மாணவிகளால் அல்லது பகுதி நேர வேலை செய்து படிப்பவர்களால் அவ்வாறு வர இயலாது. பாலின பாகுபாட்டோடு இவ்வாறு நிர்பந்திக்கின்றனர். பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளுக்கு மாறாக இத்தகைய கட்டுப் பாடு விதிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறினார்.

“பல்கலைக் கழக வளாகத்தில் ஒரு ஸ்டே ஷ்னரி கடை, கேன்டீன், ஓய்வறை, உடற்பயிற்சி கூடம், நட்புக்கூடம் என  எந்த வசதியும் இல்லை.  முனைவர் ஆராய்ச்சி மாண வர்கள் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கும்போது 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளனர், இதனை கைவிட வேண்டும். மாணவர்களுக்கான பிரச்ச னைகளை தீர்க்க, லிங்டோ குழு பரிந்துரைப்படி மாண வர் பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார். இதையொட்டி பல் கலைக்கழக பதிவாளர் ஏழுமலை, போராட்டம் நடை பெறும் இடத்திற்கு கோரிக் கைகளையும் நிறைவேற்று வதாக கூறினார். இதனை யடுத்து துணைவேந்தர் கவுரி, சிண்டிகேட் உறுப் பினர்களுடன் அடங்கிய குழுவுடன் மாணவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதன்தொடர்ச்சியாக துணைவேந்தர் அறையை முற்றுகையிட்டு மாணவர் கள் போராட்டம் நடத்தி னர். அதன்பின்னர் சிண்டி கேட் உறுப்பினர்கள், மாண வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாண வர்கள் முன்வைத்த 11  கோரிக்கைகளில் 9 கோரிக் கைகளை ஏற்றுக் கொள்வ தாக பல்கலைக் கழக  நிர்வாகம் எழுத்துப்பூர்வ மாக உறுதி அளித்தது. இதனையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்தப் போராட்டத்தில் மாணவர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ரா.பாரதி, மத்தியசென்னை மாவட்டத் தலைவர் அருண்,  கிளை செயலாளர் விக்னேஷ் மற்றும் ஐனிஷ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.